10, 11,12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 10, 11,12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறிருப்பதாவது:

'மார்ச் 2020 இல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு (+1), பன்னிரண்டாம் வகுப்பு (+2) பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களிடமிருந்தும், மார்ச் பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுத தவறியவர்களிடம் இருந்து செப்டம்பர் மாதம் நடைபெறும் துணை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு மார்ச் பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்து தனித்தேர்வர்கள் செப்டம்பர் மாதம் நடைபெறும் பத்தாம் வகுப்பு துணை தேர்வினை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

அதேபோல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட வேதியில், புவியியல், கணக்குப் பதிவியல், தொழிற்கல்வி கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான பதினோராம் வகுப்பு பொது தேர்வு எழுத ஏற்கனவே விண்ணப்பத்திருந்த தனித்தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

11 மற்றும் 12 ஆம் ஆண்டு பொதுத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இயற்கையை அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்கள் ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் விண்ணப்பம் செய்யலாம். தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை சேவை மையத்தில் பணமாக செலுத்த வேண்டும். தேர்வர்கள் பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தாங்கள் பயின்ற பள்ளிகள் மற்றும் தனித் தேர்வு மையங்கள், சேவை மையங்களுக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கரோனோ முன்னெச்சரிக்கை தொடர்பாக அரசால் வெளியிடப்பட்டுள்ள மன்னித்து வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பட்டு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் மற்றும் நெறிமுறையில் பின்னர் அறிவிக்கப்படும்.

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 11 ம் வகுப்பு பேர்வழிகளுக்கு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரையும்,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 29 ந் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

101 வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு அட்டவணை:

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு அட்டவணை:

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு அட்டவணை:


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post