தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை – செய்முறை தேர்வுகள் நிறைவு..

 தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை – செய்முறை தேர்வுகள் நிறைவு..

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இன்றுடன் அந்த தேர்வுகள் முடிவுறும் நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் மாணவர்களுக்கான வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் 5 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது உள்ள கொரோனா சூழல் காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் துவங்கிய செய்முறை தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த தேர்வுகளில் 7000 பள்ளிகளை சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த செய்முறை தேர்வுகளுக்கு பின்னாக மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கையில், ‘செய்முறை தேர்வுகளுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம். ஹால் டிக்கெட் பெற்ற பிறகு பொதுத்தேர்வுக்கு மட்டுமே வந்தால் போதும். அதுவரை உள்ள விடுமுறை நாட்களை மாணவர்கள் தேர்வுக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என கூறியுள்ளது

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post