தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில் தேர்தல் காரணமாக பள்ளிகள் இன்று முதல் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

சட்டமன்ற தேர்தல் பணிகள்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகள் காரணமாக 1 மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாமல் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் மட்டும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரவில்லை.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் - தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு!

இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பள்ளிகளை ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இன்று புனித வெள்ளி என்பதால் ஏற்கனவே அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு!!

தற்போது அனைத்து பள்ளிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வர பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகள் வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாளை ஆசிரியர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post