தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு அவசியம் என்பதற்காக வாக்குப்பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளார் ஈரோடு தொழிலாளர் துறை உதவி ஆணையர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு!

சம்பளத்துடன் விடுமுறை

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக தனியார், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு தொழிலாளர் துறை உதவி ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களும் 100% வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதன்படி தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், பொது, தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக, தொழிலக துணை இயக்குனர் சந்திரமோகன் – 9994847205, தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் – 8610711278, துணை ஆய்வாளர் முருகேசன் – 9443566160, உதவி ஆய்வாளர் ராஜ்குமார் – 9698211509, அலுவலக எண் – 04242270090 ஆகிய எண்களை பயன்படுத்தி புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post