> தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு! ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு அவசியம் என்பதற்காக வாக்குப்பதிவு நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளார் ஈரோடு தொழிலாளர் துறை உதவி ஆணையர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சம்பளத்துடன் விடுமுறை – மாவட்ட தொழிலாளர் துறை அறிவிப்பு!

சம்பளத்துடன் விடுமுறை

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக தனியார், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு தொழிலாளர் துறை உதவி ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களும் 100% வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதன்படி தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், பொது, தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க வசதியாக, தொழிலக துணை இயக்குனர் சந்திரமோகன் – 9994847205, தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் – 8610711278, துணை ஆய்வாளர் முருகேசன் – 9443566160, உதவி ஆய்வாளர் ராஜ்குமார் – 9698211509, அலுவலக எண் – 04242270090 ஆகிய எண்களை பயன்படுத்தி புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel