10th Tamil - Unit 3 Book Back Answers
Tamil Nadu Board 10th Standard Tamil - Unit 3: Book Back Answers and Solutions
This post covers the book back answers and solutions for Unit 3 – from the Tamil Nadu State Board 10th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at samacheerkalvi.net
We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.
By going through this material, you’ll gain a strong understanding of Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).
Question Types Covered:
1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
2 Mark Questions: Answer briefly
3, 4, and 5 Mark Questions: Answer in detail
All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.
All the best, Class 10 students! Prepare well and aim for top scores. Thank you!
அலகு 3:
I. திறன் அறிவோம்
1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது
ஆ) கிண்கிணி
3. காசிக்காண்டம் என்பது
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
4. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-
ஆ) இன்மையிலும் விருந்து
5. நன்மொழி என்பது
அ) பண்புத்தொகை
ஆ) குறு வினா
1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
வாருங்கள், நலமா?, அமருங்கள், நீர் அருந்துங்கள்
2. தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த கினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
இல்லை, நல்ல மனம் இருந்தால் போதும்
3. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
சிலம்பு , கிண்கிணி, அரைவடம், சுட்டி, குண்டலம்.
4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள். விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். - அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
கல்வி செல்வம் , விருந்து ஈகை
5. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
தண்ணீர் குடி – தண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
இ) சிறு வினா
1. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
விதைக்காக இருந்த தினையை உரலில் இட்டு விருந்தளித்தாள் தலைவி.
பழைய வாள், கருங்கோட்டுச் சீறியாழையும் பணையம் வைத்து விருந்தளித்தான் தலைவன்.
2. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
கால்கள் - கிண்கிணிச் சிலம்பு ஆடியது.
இடை - அரைஞாண், அரைவடம் ஆடியது.
நெற்றி - பொட்டு, வட்டச்சுட்டி ஆடியது
காது - குழை, குண்டலம் ஆடியது
தலை உச்சி - முத்துக்கள் ஆடியது.
3. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
நெருங்கிய உறவினர்களே விருந்தினர் என்றனர். வீடுகளில் திண்ணை அமைப்பதில்லை. பிறருக்கு உணவுகளைத் தருவது குறைந்துவிட்டது. தமிழர்கள் இன்று வீட்டுக்கதவுகளை மூடிவிட்டு உண்ணுகின்றனர்.
4. மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.சிலர்மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த விட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தன் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே விடு சென்றேன்.
பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
மார்கழித் திங்கள் , செங்காந்தள் மலர்கள் – இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள்
செங்காந்தள் – பண்புத்தொகை
வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை
ஈ) நெடு வினா
1. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
முன்னுரை:
சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் இங்கே காண்போம்.
இலக்கியங்களில் விருந்தோம்பல் :
திருக்குறளில் விருந்தோம்பல் எனும் அதிகாரம் உள்ளது. கல்வி, செல்வம் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் பாடியுள்ளார். விருந்தினருக்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார் செயங்கொண்டார்.
தனித்து உண்ணாமை:
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை வறுமையிலும் விருந்தோம்பல் செய்தனர் நிலத்திற்கேற்ற விருந்து அளித்தனர் விருந்தை எதிர்கொள்ளும் தன்மை உடையவர்கள்
முடிவுரை:
சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் இங்கே கண்டோம்.
2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
முன்னுரை :
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதையின் மூலம் காண்போம்.
கிராமத்து மக்கள் :
கிராமத்து மக்கள் அன்புடையவர்கள். பகிர்ந்து உண்பவர்கள். கிராமத்து விருந்து சுவை உடையது.
பசியால் வாடிய வாலிபன் :
சாலை ஓரம் இருந்த சுப்பையாவின் புஞ்சையில் அருகே எடுத்தனர். கஞ்சி குடிக்க அமர்ந்தபோது மரத்தடியில் பசியால் வாடிய வாலிபன் இருந்தான்.
அன்னமிட்ட அன்னமய்யா :
அவ்வாலிபன் அன்னமய்யாவிடம் தண்ணீர் கேட்க, அவன் நீச்சுத் தண்ணிக் கொடுத்தான். பின் கஞ்சிக் கலயத்தையும் மோர் மிளகாயும் கொடுத்தான். அவனுடன் வட்டமாக உட்கார்ந்து அனைவரும் உண்டனர்.
பெயர் பொருத்தம் :
அன்னமய்யா என்ற பெயருக்கு ஏற்ப அன்னமிட்டு மனிதநேயம் காத்தான்.
முடிவுரை
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதையின் வழி கண்டோம்.
3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
முன்னுரை:
எங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நான் செய்த விருந்தோம்பலை அழகுற காண்போம்
நான் செய்த விருந்தோம்பல்:
விருந்தினரை வரவேற்று, நீர் தந்தேன். அருகில் அமர்ந்து கலந்துரையாடினேன் வாழை இலையில் விருந்து உபசரித்தேன்.
பின் கோயிலுக்குச் சென்றோம் இரவு விருந்துஅளித்தேன் பிரியா விடை அளித்தேன்
முடிவுரை:
எங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நான் செய்த விருந்தோம்பலை அழகுற கண்டோம்.
II. மொழியை ஆள்வோம்
அ) படித்து சுவைக்க.
ஆ) மொழி பெயர்க்க
இ) பழமொழிகளை நிறைவு செய்க:-
1) உப்பில்லாப்....பண்டம் குப்பையிலே
2) .ஒரு பானை சோற்றுக்கு... ஒரு சோறு பதம்
3) உப்பிட்டவரை... உள்ளளவும் நினை
4)விருந்தும் ...மருந்தும் மூன்று வேளை
5)அளவுக்கு மிஞ்சினால்... அமிர்தமும் நஞ்சாகும்
ஈ) பத்தியை படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.
பழைய சோறு
பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து. நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து. காய்ந்து. குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை. கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில்போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒருவகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால். வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளக் குடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு அது கிராமத்து உன்னதம்.
"மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து"....முக்கூடற்பள்ளு
கண்ணன், பிரசாந்தி சேகரம் அடிசில் 2017
விடைகுறிப்பு:
"பழையசோறு"
வயல்களில் விளைந்த இளநெல்லை. நீராவியில் புழுங்கல் மணம் வரும்வரை அவித்து. காயவைத்து. குத்திய அந்தப் புழுங்கல் அரிசியைச் சோறாக்குவர். உச்சிவெயிலில் அது சோறு. இரவு முழுவதும் நீரில் ஊறியபின் மறுநாள் அது பழையசோறு அல்லது பழையது. அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்துக் குடித்தால் அது நீராகாரம். வாழை இலையில் பிழிந்துப் போட்டு வடுமாங்காய். உப்பு நாரத்தங்காய் சேர்த்து உண்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல்நாள் குழம்பு பழைய சோற்றுக்கு இன்னும் சுவை சேர்க்கும். நல்ல பழையதில் மாம்பழ வாசம் வீசும். அத்தகைய பழையசோறு கிராமத்தின் உன்னதமாக விளங்குகிறது.
கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் உள்ள சொற்களின் எண்ணிக்கை : 111
சுருக்கிய பத்தியில் உள்ள சொற்களின் எண்ணிக்கை : 63
உ) கதையாக்குக.
மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்; புதுப்புதுச் செய்திகள் கிட்டும் ! கிட்டுகிற கருப்பொருள்களைத் திரட்டி, கற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக. யாருமற்றவராக..... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.
விடைகுறிப்பு:
சிறுகதை : மணி, செல்வியும் தனது திருமண நாளை குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாட தீர்மானித்தார்கள். உணவும் உடையும் கொடுத்து மகிழ்ந்தனர். அங்கு பாரதி என்ற குழந்தை மூக்கும் முழியுமாக அழகாய் இருந்தது. திருமணமாகி பல ஆண்டுகளாக இவர்களுக்குக் குழந்தை இல்லை. காப்பக உரிமையாளரிடம் பாரதி என்ற குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ள அனுமதிப் பெற்றனர். கணவன் மனைவி இருவரும் அளவற்ற மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.
ஊ) கடிதம் எழுதுக.
உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.
அனுப்புநர் :
சேது. இராமன்,
101/22, தெற்குரத வீதி,
அஅஅஅஅ.
பெறுநர் :
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு ஆணையம்,
ஆஆஆஆஆ
ஐயா,
பொருள் : உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கடிதம்.
வணக்கம், இன்று காலை மேலவீதியில் உள்ள தனியார் உணவு விடுதியில் காலை உணவு சாப்பிட்டேன். அவ்வுணவு தரம் இல்லாமலும் விலை அதிகமாகவும் இருந்தது. அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். எனவே அந்த உணவு விடுதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இடம் : அஅஅஅஅ. இப்படிக்கு
நாள் : 15-5-2025 தங்கள் உண்மையுள்ள
சே.இராமன்
உறைமேல் முகவரி :
பெறுநர் :
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு ஆணையம்,
ஆஆஆஆ
எ) பாடலை படித்து நயம் பாராட்டுக
கவிதையில் உள்ள திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம்பெற வேண்டும்.
கத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசி வரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்
திரண்டக் கருத்து
- ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த நாகையில் காத்தான் என்பவரின் சத்திரத்தில் மாலை மயங்கும் வேளையில் அரிசி மூட்டைகள் வரும்.
- அதைக் குத்தி சமைக்கும் பக்குவத்திற்கு கொண்டு வந்து அடுப்பில் ஏற்ற இரவு வந்துவிடும்.
- சோறாக்கி இலையில் இடும்போது பொழுது விடிந்து விடும்.
- இதுவும் ஒரு சத்திரமோ என வேதனையுடன் பாடல் அமைந்துள்ளது.
பொருள் நயம்
- "பசி என்று வந்தால், உணவு கிடைப்பதற்குள் அடுத்த நாளே வந்துவிடும்" என்பது பாடலின் பொருள்.
சொல் நயம்
- அத்தமிக்கும், ஊரடங்கும், வெள்ளி எழும் போன்ற நயமிக்க சொற்கள் காணப்படுகின்றன.
சந்த நயம்
- இப்பாடல் செப்பலோசையில் அமைந்துள்ளது.
எதுகை நயம்
அடிதோறும் அல்லது சீர் தோறும் முதல் எழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது எதுகை நயம்.
எ.கா
- கத்து கடல் - உலையிட
- அத்தமிக்கும் - இலையிட
மோனை நயம்
அடிதோறும் அல்லது சீர் தோறும் முதல் எழுத்து ஒன்று போல் வருவது மோனை நயம்.
எ.கா
- அத்தமிக்கும் கத்துகடல் உலையிலிட
- அரிசி காத்தான் ஊரடங்கும்
அணிநயம்
இரட்டுற மொழிதல் அணி
பாநயம்
- வெண்பா
III. மொழியோடு விளையாடு
அ) விடுபட்ட எழுத்துக்களை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஓர் அறநூலின் பெயரைக் கண்டுபிடிக்க.
ஆ) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
இ) அகராதியில் காண்க.
ஈ) காட்சியை கண்டு கவினுற எழுதுக.
IV. செயல் திட்டம்
அ) படிப்போம், பயன்படுத்துவோம்!
V. நிற்க அதற்குத் தக...
- நாம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது.
- நாட்டுக் காய்கறிகளையே உண்ண வேண்டும்.
- கீரைகளின் நன்மைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
- விரைவு உணவுகளை உண்ணக்கூடாது.
- நமது உணவு முறைகளின் நன்மைகளை எதிர்வரும் தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment