34 மாணவர்களின்,பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு..!
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 34 பேரின் பொதுத்தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதத்தில் அனைத்து பாடங்களுக்குமான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. அரசு அறிவுறுத்திய உத்தரவுகள் படி அனைத்து விதமான விதிமுறைகளையும் கடைபிடித்து தான் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு மையங்களை சோதிக்க அதிரடி பறக்கும் படையினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், மார்ச் 27ம் தேதி அன்று நடத்தப்பட்ட கணித தேர்விற்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் உதவியதாக புகார்கள் பெறப்பட்டது. இதன்காரணமாக 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் 34 மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.