1st std to 9th வகுப்பு வரை ஆல் பாஸ் - மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - all pass

1st std to 9th வகுப்பு வரை ஆல் பாஸ் - மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - all pass

தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்யப் பள்ளிக் கல்வித்துறைத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தேர்ச்சி (All Pass)

கொரோனா பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் மூடப்பட்டிருந்தன. அதேநேரத்தில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அது மட்டுமல்லாமல் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

தொற்று குறைந்தது

எனினும் அரசு எடுத்தத் தொடர் நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த வருடம் மாணவர்களுக்குக் கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆயிரத்தைத் தாண்டியது (Exceeded a thousand)

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,500யை எட்டியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் மறுபுறம், அதிவேகமாக பரவி வருவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஜனவரி 10-ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆல் பாஸ் (All Pass)


இந்நிலையில் தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய பள்ளிக் கல்வித்துறைத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆல் பாஸ் (All Pass) செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இருப்பினும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளைத் திட்டமிட்டபடி நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post