8th Tamil Refresher Course Topic 16 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

8th Tamil Refresher Course Topic 16 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

8th Tamil refresher course unit 16 - படிதுப் பொருளுணர்தல் 

மதிப்பீட்டுச் செயல்பாடு

கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து விடையளிக்க .

சென்னையின் அடையாளம்

மே தின நினைவாகவும், உழைப்பைப் போற்றும் விதத்திலும் சென்னை , மெரீனாக் கடற்கரையில் நினைவுச்சிலை எழுப்பப்பட்டது. இது, உழைப்பாளர் சிலை என அழைக்கப்படுகிறது. இது சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலர் , தொழிலாளர் பெற்ற உரிமையை நினைவுகூறும் வகையில், சென்னை , மெரீனாக் கடற்கரையில், 1923இல் பொதுக்கூட்டம் நடத்தினார் . இதுவே , மே தினத்தையொட்டி இந்தியாவில் நடந்த முதல் கூட்டமாக மதிக்கப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வின் நினைவாக, தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தன் ஆட்சிக் காலத்தில் ஒரு சிலை எழுப்ப உத்தரவிட்டார் . கடினமான உழைப்பில், நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பது போல் அச்சிலை உருவாக்கப்பட்டது. சென்னை , அரசு கவின்கலைக் கல்லூரி முதல்வராக இருந்த தேவி பிரசாத்ராய் சவுத்திரி அதை வடிவமைத்தார் . கவின்கலைக் கல்லூரியில் அப்போதைய காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு ஆகியோர் சிலைக்கான மாடலாக இருந்தனர். இச்சிலை, கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை, சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் பீஷ்னுராம் மேதி, ஜனவரி 25, 1959இல் திறந்து வைத்தார் .

வினாக்கள்

1. உழைப்பாளர் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

உழைப்பாளர் சிலை சென்னை , மெரீனாக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

2. உழைப்பாளர் சிலை எந்த நிகழ்வின் நினைவாக எழுப்பப்பட்டது?

தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலர் , தொழிலாளர் பெற்ற உரிமையை நினைவுகூறும் வகையில், சென்னை , மெரீனாக் கடற்கரையில், 1923இல் பொதுக்கூட்டம் நடத்தினார் . அதன் நினைவாக உழைப்பாளர் சிலை எழுப்பப்பட்டது.

3. இந்தியாவின் முதல் மே தினக் கூட்டம் யாரால் நடத்தப்பட்டது?

பொதுவுடைமை இயக்கத் தலைவர் சிங்காரவேலரால் நடத்தப்பட்டது.

4. உழைப்பாளர் சிலைக்கு மாதிரிகளாக இடம் பெற்றவர்கள் யாவர்?

கவின்கலைக் கல்லூரியில் அப்போதைய காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு ஆகியோர் சிலைக்கான மாடலாக இருந்தனர்.

5. உழைப்பாளர் சிலை எழுப்ப உத்தரவிட்டவர் யார் ?

தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தன் ஆட்சிக் காலத்தில் உழைப்பாளர் சிலை எழுப்ப உத்தரவிட்டார் .

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post