CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

இந்தியாவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021 – 2022ம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (18.10.2021) முதல் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாக உள்ளது.


CBSE முதல் பருவத்தேர்வு:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறையும் திட்டமிட்டது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட நாடு முழுவதும் பள்ளிகள் திறந்து தற்போது 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஏற்கனவே அச்சத்தால் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகவே திறக்கப்பட்டது.


தற்போது இரண்டாம் காலாண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மத்திய கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டு கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக எவ்வித தேர்வுக்கும் நடைபெறவில்லை. கடைசி நேரத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.

இப்போது வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருவதால் மத்திய கல்வி வாரியம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வை நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கால அட்டவணை அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு கால அட்டவணை cbse.nic.in அல்லது cbseacademic.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post