8th std Tamil Basic quiz 16 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 16 Tamil)

8th std Tamil Basic quiz 16 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 16 Tamil)

1. பொருத்துக.

                                       விடை

அ ) பண்          -   இசை

ஆ ) சுனை      -   நீர்நிலை

இ) முரலும்      -   முழங்கும்

ஈ ) வேழம்         -  யானை

2. திருக்கேதாரம் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

அ) திரு+ கேதாரம்

ஆ) திருக் + கேதாரம்

இ) திருவை + கேதாரம்

ஈ ) திருக்கை + தாரம்

விடை :   ஆ) திருக் + கேதாரம்

3. சரியான விடையைத் தேர்க.

தேவாரம் பாடிய மூவர் -

அ) திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்

ஆ) சுந்தரர், பட்டினத்தார், நாவுக்கரசர்

இ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

ஈ) திருஞானசம்பந்தர், நம்பியாண்டார் நம்பி, திருநாவுக்கரசர்

விடை : இ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

4. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

பதிகம் என்பது  --------------- பாடல்களைக் கொண்டது.

அ) எட்டு

ஆ) பத்து

இ) ஐந்து

ஈ) ஏழு

விடை :  ஆ) பத்து

5. திருக்கேதாரப் பாடலில் அமைந்துள்ள இசைக்கருவிகளின் பெயர்களை எழுதுக.

1 ) புல்லாங்குழல்  2  ) முழவு

6. கீழ்க்காணும் திருக்கேதாரப் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து  எழுதுக.

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்

கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய

மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்

கிண் என்று இசைமுரலும் திருக்கேதாரம் என்னீரே

விடை :  

எதுகைச் சொற்கள்  - ண் 

1 ) பண்ணின் 

2 ) கண்ணின் 

3 ) மண்நின்றன

4 ) கிண்என்று

7. தொடர் அமைத்து எழுதுக. 

அ) பழவெய்

ஆ) சொரிய

விடை :  

அ ) பழவெய் கொண்டு குழல் செய்தான்

ஆ ) தேவாரப்பாடல்கள் தேன் சொரிய அமைந்துள்ளன.

8. திருக்கேதார நகரின் சிறப்புகளைத் தொகுத்து எழுதுக.

விடை :

1 ) தமிழ்ப்பாடல்களைப் பாடும்போது புல்லாங்குழலும் , முழவும் இணைந்து ஓலிக்கும்.

2 ) நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்

3 ) மதயானைகள் மணிகளை வாரிவாரி வீசும்.

4 ) இதனால் ' கிண் ' எனும் ஒலியானது இசையாக முழங்கும்.

__________________________________________________________________________________

8th STD ALL SUBJECT SCERT BASIC QUIZ QUESTIONS COLLECTION T/M & E/M

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post