7th Social Science Term 2 Solution | Lesson.3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

7th Social Science Term 2 Solution | Lesson.3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Lesson.3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

  1. தாதாஜி கொண்ட தேவ்
  2. கவிகலாஷ்
  3. ஜீஜாபாய்
  4. ராம்தாஸ்

விடை :  1.தாதாஜி கொண்ட தேவ்

2. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

  1. தேஷ்முக்
  2. பேஷ்வா
  3. பண்டிட்ராவ்
  4. பட்டீல்

விடை :  பேஷ்வா

3. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

  1. ஷாகு
  2. அனாஜி தத்தா
  3. தாதாஜி கொண்ட தேவ்
  4. கவிகலாஷ்

விடை : கவிகலாஷ்

4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

  1. பீரங்கிப்படை
  2. குதிரைப்படை
  3. காலட்படை
  4. யானைப்படை

விடை : காலட்படை

5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

  1. பாலாஜி விஸ்வநாத்
  2. பாஜிராவ்
  3. பாலாஜி பாஜிராவ்
  4. ஷாகு

விடை : பாஜிராவ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மகாராஷ்டிராவில் பரவிய _________________ இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.

விடை : சேத்தக்

2. பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் _________________

விடை :இபாதத் கானா

3. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு ________________ இடத்தில் சோகமாய் முடிந்தது.

விடை :சலீம் சிஸ்டி

4. அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் _________________

விடை : ஷாஜகான்

5. சிவாஜியைத் தொடர்ந்து _________________ வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.

விடை : சுயயூர்கள் என்றழைக்கப்பட்ட

III. பொருத்துக

1. ஷாஜி போன்ஸ்லே    - சிவாஜியின் தாய்

2. சாம்பாஜி                 -       பீஜப்பூர் தளபதி

3. ஷாகு                          -       சிவாஜியின் தந்தை

4. ஜீஜாபாய்                         - சிவாஜியின் மகன்

5. அப்சல்கான்                    -     சிவாஜியின் பேரன்

விடை: 1 – இ, 2 – ஈ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

 IV. சரியா? தவறா?

1. மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.

விடை : சரி


2. பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன. 

விடை : தவறு

3. சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.

விடை : சரி

4. தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்..

விடை : சரி

5. அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்துமுறை படையெடுத்தார்..

விடை : தவறு

V. 1. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக: பொருத்தமான விடையை டிக் ( √ ) இட்டுக் காட்டவும்.

1. கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.

காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

  1. கூற்றிற்கான காரணம் சரி
  2. கூற்றிற்கான காரணம் தவறு
  3. கூற்று சரி, காரணம் தவறு
  4. கூற்று மற்றும் காரணம் தவறு

விடை : 2.கூற்றிற்கான காரணம் தவறு

2. வாக்கியம் – I : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.

வாக்கியம் – I : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படைமுக்கியத்துவம் பெற்றிருந்தது

  1.  I சரி
  2.  II சரி
  3. I மற்றும் II சரி
  4. I மற்றும் II தவறு

விடை :3. I மற்றும் II சரி

3. பொருந்தாததைக் கண்டுபிடிக்க

ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே, சிவாஜி, சாம்பாஜி, ஷாகு

விடை : ரகுஜி

4. தவறான இணையைக் கண்டுபிடிக்க

  1. கெய்க்வாட் – பரோடா
  2. பேஷ்வா – நாக்பூர்
  3. ஹோல்கர் – இந்தூர்
  4. சிந்தியா – குவாலியர்

விடை : 2.பேஷ்வா – நாக்பூர்


5. காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.

  • I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
  • II பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.
  • III சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
  • IV பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்

விடை :

  • I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
  • III சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
  • IV பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்
  • II பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

1. மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.

  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மேலும், மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாகச் சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.
  • மராத்தியப் பகுதியைச் சேர்ந்த சமயத் தலைவர்கள் பல்வேறு சமூகக் குழுக்களிலிருந்து வந்தவராவர்.
  • பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பெரியோர்களில் ஏக்நாத், துக்காராம், ராம்தாஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர். துக்காராம், ராம்தாஸ் ஆகியோர் சிவாஜியின் வாழ்வின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தினர்.

2. சௌத் மற்றும் சர்தேஷ்முக.

  • கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்ற ம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4), பாதுகாப்புக் கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும்.

3. மராத்தியர்களின் வருவாய் நிர்வாகத்தில் காமவிஸ்தரின் பங்கு 

  • பேஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது. அவர் பேஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார். கப்பமோ வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார். வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

4. சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல். 

  • சாம்பாஜியின் தலைமையிலான மராத்தியர்கள் முகலாயரை எதிர்க்கும் நிலையில் இல்லை. 1861இல்  ரங்கசீப் தானே தக்காணத்தை வந்தடைந்தார். பீஜப்பூரையும் கோல்கொண்டாவையும் கைப்பற்றி இணைப்பதே ஔரங்கசீப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. 1687 அவ்விரு சுல்தானியங்களும் ஔரங்கசீப்பிடம் வீழ்ந்தன. ஒரு வருடத்திற்கும் சற்றே அதிகமான காலப்பகுதியில் சாம்பாஜி கைப்பற்றப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்

5. 1761 ஆம் ஆண்டில் ல் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.

  • மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761இல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிப்பட்டில்  டிந்தது. அப்தாலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன்னர், எட்டுமுறை படையெடுத்துள்ளார். தளபதிகள் பலரின் கீழ் பிரிந்திருந்த மராத்தியப் படையினர் பலவகையான தந்திரங்களுடன் போரை அணுகினர். 1761இல் நடைபெற்ற மூன்றாம் பானிப்பட்போரைப் பீரங்கிப் படைகள் தீர்மானித்தன. ஆப்கானியர்களின் இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லக் கூடிய பீரங்கிப் படைகள் மராத்திய காலாட்படையினரையும் குதிரைப்படையினரையும் கொன்று குவித்தன. தகர்த்தெறியப்பட்டன.

2 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post