தமிழக கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – செமஸ்டர் தேர்வு கட்டணம் ரத்து?

தமிழக கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – செமஸ்டர் தேர்வு கட்டணம் ரத்து?


தமிழகத்தில் வருகிற 15ம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய கூறி பெற்றோர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

செமஸ்டர் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்க சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாக மாணாக்கர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு மற்றும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு வருகிற 15ம் தேதி முதல் இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்தார்.

மேழும் செமஸ்டர் தேர்விற்கு கட்டணமாக ஒரு பாடத்திற்கு ரூ.90 வீதம் 8 பாடத்திற்கு ரூ.720 மற்றும் விண்ணப்ப, மதிப்பெண் பட்டியலுக்கு ரூ.150 என மொத்தம் ரூ.870 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தனியார் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு கட்டணமாக சுமார் ரூ.2000 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். கடந்த ஆண்டு நடைபெற்ற செமஸ்டர் தேர்விற்கும் இதேபோல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஆனால் கடந்த முறை கொரோனா தொற்று காரணமாக செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதன் காரணமாக மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் போக்குவரத்து செலவினம், நிர்வாக செலவுகள், மேற்பார்வையாளர்கள் ஊதியம் என சுமார் 70% செலவினம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களும் வங்கிக்கு நேரடியாக சென்று கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பெற்றோர்கள் பலர் வேலையின்றியும், வருமானமின்றியும் தவித்து வருகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் நடைபெறும் மாணாக்கர்களுக்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வினை கட்டணமின்றி இலவசமாக நடந்த பரிசீலினை செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post