மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - புதுவை அரசு

புதுவையில் Covid 19 தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் நலன் கருதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் அறிவித்தலின்படி அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 22 ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி மே மாதம் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதேசமயம், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. அவர்களுக்கு தற்போது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகள் இயங்கும்.

தொற்றின் பரவலை கருத்தில் கொண்டு இவ்வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

It is informed that all the Govt./ Govt . Aided / Private schools in the Puducherry and Karaikal regions will function for 5 days a week i.e. from Monday to Friday . Saturdays are declared as Holidays

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post