10th tamil ilakkanam Question

 10th Tamil இலக்கணம் வினா?விடைகள்.

10th Tamil இலக்கணம் வினா?விடைகள்.


1.வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  •  வினா 6 வகைப்படும். அவை

  1. அறிவினா 
  2. அறியா வினா 
  3. ஐய வினா 
  4. கொளல் வினா
  5. கொடை வினா 
  6. ஏவல் வினா

2. அறிவினா என்றால் என்ன?


  • தான் அறிந்தவற்றை பிறரிடம் கேட்டல்

எ.கா : ஆசிரியர் மாணவரிடம் இந்த கவிதையின் பொருள் யாது? என்று கேட்டல்

3.அறியா வினா - விளக்குக?

  • தான் அறியாத ஒன்றை அறிந்துகொள்ள கேட்பது .

எ.கா : எட்டுத்தொகை நூல்கள் யாவை ?

4.ஐய வினா என்றால் என்ன? 

  • ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காக கேட்பது இச்செயலை செய்தது தங்கையா?மணிமேகலையா? என வினவுதல்

5. கொளல் வினா என்பது யாது?

  • தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ள வினவுவது.

எ.கா: ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? என நூலகரிடம் கேட்டல்.

6.கொடை வினா - விளக்குக?

  • பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கக் கேட்பது.
  •  எ.கா : உன்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இருக்கிறதா? என கொடுப்பதற்காக வினவுதல் .

7.ஏவல் வினா - விளக்குக?

  •  ஒரு செயலை செய்யும் மாறு ஏவுவது
  • எ.கா : தாய் மகனைப் பார்த்து தக்காளி வாங்க கடைக்குச் செல்கிறாயா? என கேட்பது. 
விடை வகை


8.விடை எத்தனை வகைப்படும் ? அவை யாவை?

  • விடை எட்டு வகைப்படும். அவை 
  1. சுட்டு விடை 
  2. மறை விடை
  3. நேர் விடை 
  4. ஏவல் விடை 
  5. வினா எதிர் வினாதல் விடை
  6. உற்றது உரைத்தல் விடை 
  7. உறுவது கூறல் விடை 
  8. இனமொழி விடை.

9. வெளிப்படை விடைகள் யாவை?

  • விடைகள் நேரடியாக இருப்பின் வெளிப்படை விடைகள் எனப்படும்.
  • அவை: 
  1. சுட்டுவிடை, 
  2. மறை விடை , 
  3. நேர் விடை

10.குறிப்பு விடைகள் யாவை?

  • விடைகள் குறிப்பாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனப்படும்.
  • அவை:ஏவல் விடை , வினா எதிர் வினாதல் விடை , உற்றது உரைத்தல் விடை,இனமொழி விடை,உறுவது கூறல் விடை.

11. சுட்டு விடையை எடுத்துக்காட்டுடன் விளக்குக?

  • சுட்டி கூறும் விடை சுட்டுவிடை எனப்படும்.
  • கடைத்தெரு எங்கு உள்ளது ' என்ற வினாவிற்கு வலப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல்.

12.மறை விடை என்றால் என்ன ?

  • மறுத்துக் கூறும் விடை மறைவிடை எனப்படும்.
  • எ.கா: கடைக்கு போவாயா என்ற கேள்விக்கு .போகமாட்டேன்' என மறுத்துக் கூறுவது.

13.நேர் விடை என்றால் என்ன?

  •  உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை எனப்படும்.

  1. கடைக்கு போவாயா ' என்ற கேள்விக்கு போவேன் ' என்று கூறுவது.

14.ஏவல் விடையை விளக்குக ?

  • மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை .

  1. இது செய்வாயா ?'என்று கூறும் பொழுது ' நீயே செய்' என்று ஏவிக் கூறுவது .

15.உற்றது உரைத்தல் விடையை விளக்குக? 

  • வினாவிற்கு விடையாக ஏற்கனவே நேர்ந்ததைக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும் .
  • நீ விளையாட வில்லையா என்ற வினாவிற்கு கால் வலிக்கிறது' எனத் உற்றதை உரைப்பது.

16.உறுவது கூறல் விடை என்பது என்ன ?

  • வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதை கூறல் உறுவது கூறல் விடை எனப்படும் . 
  • நீ விளையாட வில்லையா?' என்ற வினாவிற்கு கால் வலிக்கும்' என உறுவதை உரைப்பது.

17. இனமொழி விடை என்றால் என்ன?

  • வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாக கூறுவது இனமொழி விடை எனப்படும்.
  • உனக்கு கதை எழுதத் தெரியுமா ?என்ற வினாவிற்கு கட்டுரை எழுதத்தெரியும்' என்று கூறுவது.

பொருள்கோள்

18. பொருள்கோள் என்றால் என்ன ?
  • செய்யுளில் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு ' பொருள்கோள் ' என்று பெயர்.

19 - பொருள்கோள் எத்தனை வகைப்படும் அவை யாவை ?
  • பொருள்கோள் எட்டு வகைப்படும். 
  • அவை
  1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
  2. மொழி மாற்றுப் பொருள்கள் 
  3. நிரல்நிறைப் பொருள்கோள்
  4. விற்பூட்டுப் பொருள்கோள்
  5. தாப்பிசைப் பொருள்கோள்
  6. அளைமறிபாப்புப் பொருள்கோள்
  7.  கொண்டு கூட்டு பொருள்கோள்
  8. அடிமறி மாற்றுப் பொருள்கோள்.

20. ஆற்றுநீர்ப் பொருள்கோள் - விளக்குக?

  • ஆற்றுநீர்ப் பொருள்கோள் 
  • பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றுநீரின் போக்கை போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது 'ஆற்றுநீர்ப் பொருள்கோள்' ஆகும் .

எ.கா

சொல்லரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் 

போல் மெல்லவே கரு இருந்து இன்று 

மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் 

தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் 

இறைஞ்சிக் காய்த்தவே சீவக சிந்தாமணி


21.நிரல்நிறைப் பொருள்கோள் என்ன ?

  • நிரல்நிறை பொருள்கோள் ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிழல் நிறையாக ( வரிசையாக ) அமைந்து வருவது நிரல்நிறைப் பொருள்கோள் எனப்படும் .

22.நிரல் நிறைப் பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  • இரண்டு வகைப்படும் .
  • அவை 
  1. முறை நிரல்நிறைப் பொருள்கோள்
  2.  எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post