பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்பு நடைபெறுமா? அல்லது வழக்கமான வகுப்பு நடைபெறுமா?

  கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்பு நடைபெறுமா? அல்லது வழக்கமான வகுப்பு நடைபெறுமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்


கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. மேலும் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறக்கப்படும்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் பாதி மாணவர்கள் காலையிலும் பாதி மாணவர்கள் மாலையிலும் வரவழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது

ஆனால் இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தபோது கொரோனாவுக்கு பின் சுழற்சி முறையான வகுப்புகள் கிடையாது என்றும் அனைத்து வகுப்புகளும் ஒரே நேரத்தில் திறக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் அனைத்து அரசு பள்ளிகளில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்

அமைச்சர் செங்கோட்டையனின் இந்த அறிவிப்பை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின் சுழற்சிமுறை வகுப்புகள் கிடையாது என்பதும் வழக்கமான வகுப்புதான் என்பதும் உறுதியாகி உள்ளது


1 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post