தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 சதவிகித விழுக்காடு பாடங்கள் குறைக்கப்பட இருப்பதாக தகவல்

கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று கட்டுக்குள் வராததால், 107 வது நாளாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இதனால், நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களின் பாடச்சுமை 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று மத்திய இடை நிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்தது. ஒரு ஆண்டுக்கு மட்டும் இந்த பாடக்குறைப்பு இருக்கும் என சிபிஎஸ்இ அறிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 சதவிகித விழுக்காடு பாடங்கள் குறைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் அடுத்த வாரம் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post