கவிதை
தலைப்பு : இளையோர் திறன்
விடியலை நோக்கும் விழிகளாம் நாம்,
வெற்றியைத் தேடும் இளையோர் நாம்!
உழைப்பை நம்பி வாழ்ந்திடுவோம்,
உலகம் வியக்கும் சாதனை செய்வோம்!
கல்வியே நமக்கு பெரும் செல்வம்,
கடமையே நமக்கு உயர்ந்த தர்மம்!
நேர்மையும் நன்னெறியும் கொண்டு,
நெஞ்சம் நிறைந்த வாழ்வு வாழ்வோம்!
அன்பை விதைத்து அமைதி காப்போம்,
அறிவை வளர்த்து நாட்டைக் காப்போம்!
ஒற்றுமையோடு உழைத்து நின்றால்,
ஒளிமயமான நாளை படைப்போம்!
இளையோர் திறன் ஒளிவிளக்காம்,
இந்த மண்ணின் நம்பிக்கையாம்!
நாளைய இந்தியா நம் கைகளில்,
நம்பிக்கையோடு உயர்த்திடுவோம்!
0 Comments:
Post a Comment