கட்டுரை
தலைப்பு : இளையோர் திறன்
முன்னுரை
இளையோர் ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கை ஆவர். அவர்களின் திறமையும் உழைப்பும் நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. மாணவப் பருவத்திலேயே நல்ல பண்புகளையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
திறமைகளை வளர்ப்பது எப்படி?
தொடர்ந்து பயிற்சி செய்தல், புத்தகங்கள் படித்தல், புதிய விஷயங்களைக் கற்றல், ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்பது, போட்டிகளில் கலந்து கொள்வது ஆகியவை மாணவர்களின் திறமையை வளர்க்கும்.
நல்ல பண்புகள்
தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், நேரம் தவறாமை, கடின உழைப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்ற நல்ல பண்புகள் திறமையுடன் இணைந்தால் வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடையலாம்.
இளையோரின் கடமைகள்
சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், மரக்கன்றுகள் நடுதல், சுத்தத்தைப் பேணுதல், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துதல், நாட்டின் சட்டங்களை மதித்தல் ஆகியவை ஒவ்வொரு இளையோரின் கடமையாகும்.
முடிவுரை
இளையோர் தங்கள் திறமைகளை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். அவர்களின் அறிவும் உழைப்பும் இந்தியாவை உலக நாடுகளில் முன்னோடி நாடாக மாற்றும்.
"இளையோர் திறனே இந்தியாவின் எதிர்கால வலிமை."
0 Comments:
Post a Comment