6,7,8,9,10,11,12th Exam Question Paper 2025 - 2026 | Important | Answer key | Syllabus

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பசுமையிம் பாரம்பரியமும் - பேச்சுப் போட்டி !

பசுமையிம் பாரம்பரியமும் - பேச்சுப் போட்டி !

ஒரு நாளைக்கு மூன்று மூச்சு எடுத்தா மட்டும் வாழ முடியாது… அந்த மூச்சு சுத்தமா இருக்கணும்!

மரம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் தெரியுமா?

வெயில் மட்டும், தூசி மட்டும், மாசு மட்டும்…!

நாம மூச்சே வாங்க முடியாத உலகம்!

அதான் தான் இன்று பேசப் போகிற விஷயம் — பசுமையும் பாரம்பரியமும், அதுலயும் பசுமை பாதுகாப்பு, நெகிழி தவிர்!"

மரம் இல்லாம உயிர் இருக்குமா?

ஆறு இல்லாம பயிரு விளையுமா?

"நீ பசுமையை காப்பா, பசுமை உன்னை காப்பும்" — இது பழமொழி இல்லை, நேரடி உண்மை.

ஆனா இப்போ என்ன நடக்குது? காட்ட வெட்டுறோம், ஆற்றுல குப்பை போட்டுறோம், காற்றுல விஷம் கலக்குறோம். இப்படி இருந்தா நாளைக்கு சுவாசிக்க காற்று கிடைக்குமா?


நம்ம ஊர் கோயில்கள், திருவிழாக்கள், கலைகள் — எல்லாமே இயற்கை நேசத்தோட கலந்திருக்குது.

பழைய காலத்துல மரத்துக்கு பூஜை பண்ணுவாங்க, குளத்துக்கு கரை கட்டுவாங்க. அது எல்லாம் ஏன்? இயற்கையை பாதுகாக்கத்தான்.

"பாரம்பரியம் என்பது பழைய நினைவுகள் இல்லை, அது எதிர்காலத்துக்கு வழிகாட்டி" — இதை மறந்தா, நம்ம வேரையே மறந்த மாதிரி.


இப்போ பெரிய பிரச்சனை என்னன்னா — நெகிழி.

அது கரையாத குப்பை. மண்ணை மாசாக்கும், கடலையும் மாசாக்கும், விலங்குகளையும் கொல்லும்.

நம்ம முன்னோர்களோ நெகிழி பயன்படுத்தவே இல்ல. பனைப்பட்டி, மண் பானை, துணி பைகள் — இவ்ளோ சூப்பரா பயன்படுத்துவாங்க.

அமெரிக்க பழங்குடிகள் சொல்வாங்க, "புவி நமக்கு வந்த சொத்து இல்லை, அது நம்ம பிள்ளைகளிடமிருந்து எடுத்த கடன்". அப்படின்னா, நாம நெகிழியைத் தவிர்க்கணும், பசுமையை காப்பாத்தணும்.


பசுமையும் பாரம்பரியமும் — ரெண்டும் ஒரே நாணயத்தோட இரு பக்கங்கள்.

ஒன்னையும் கைவிட்டா, இன்னொன்னும் நீண்ட நாள் நிலைக்காது.


Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel