6,7,8,9,10,11,12th Exam Question Paper 2025 - 2026 | Important | Answer key | Syllabus

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் கட்டுப்பாடு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை மறுநாள் முடிய உள்ளன. இதைத் தொடர்ந்து விடை திருத்தம் தொடர்பாக தேர்வுத்துறை இணை இயக்குனர் நரேஷ் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அந்தந்த மாவட்ட விடைத்தாள்கள் அந்த மாவட்டத்திலேயே மதிப்பீடு செய்யப்படும். தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும்; ஆங்கில வழி ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும். இதில் மாற்றமும் இருக்கக்கூடாது. மதிப்பீட்டு பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் காலதாமதமின்றி முடிக்க வேண்டும்.

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என அனைத்திலும் உள்ள தகுதியான பாட ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தப் பணிக்கு அமர்த்த வேண்டும். ஏப். 11ம் தேதிக்குள் ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்துவதில் தமிழ் வழி ஆசிரியர்கள், ஆங்கில வழி தாளையும்; ஆங்கில வழி ஆசிரியர்கள் தமிழ் வழி தாளையும் திருத்துவதால் மதிப்பெண் பதிவிடுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விடை திருத்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel