தமிழக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு

 தமிழக அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு, ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பை உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டாக தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்வழி கல்வியில் பயிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கு ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இலவசக் கல்வி உரிமை சட்டத்தில், 1 முதல் 8- ம் வகுப்பு வரை இலவச கல்விதான் அளிக்க வேண்டும். ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு கட்டணமாக ரூ.65 வசூலிக்க கல்வித் துறை அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

மாணவர்களிடம் கட்டணம் கேட்டால் தர மறுக்கின்றனர். இதனால், தேர்வு கட்டணத்தை ஆசிரியர்களே செலுத்த வேண்டியிருக்கிறது. இதேபோல், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் தேர்வு கட்டணமாக ரூ.100 வசூலிக்கின்றனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு விலக்கு அளித்ததுபோல், 9-ம் வகுப்பு வரை தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து சிவகங்கை மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் இதே நடைமுறைதான் உள்ளது. கடந்த ஆண்டே தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டது. மேலும், அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்ட தேர்வு குழுவே கட்டணத்தை நிர்ணயிக்கிறது.

இத்தொகை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு ஆகிய மூன்று தேர்வுகளின் கேள்வித்தாள்களுக்காக வசூலிக்கப்படுகிறது. அரசுதான் கட்டண விலக்கு அளிக்க முடியும், என்றனர்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post