அரையாண்டு விடுமுறை: மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உத்தரவை பிறப்பித்த பள்ளிக்கல்வித் துறை!!

அரையாண்டு விடுமுறை: மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உத்தரவை பிறப்பித்த பள்ளிக்கல்வித் துறை!!



தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு முடிந்து, விடுமுறை விடப்படும் காலத்தில் பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்படவிருக்கும் நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.


அதில், அரையாண்டு விடுமுறைக் காலத்தில், பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் போன்று அசைன்மென்ட்களை மட்டும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடுமுறை.. விடுமுறை..

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு டிச. 24 முதல் ஜன. 1-ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தோ்வு கடந்த டிச.16-ஆம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்று வந்தது.


பொதுத் தோ்வு எழுதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்தத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், நிகழாண்டு விடைத்தாள்களை விரைவாக திருத்தி வழங்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, அரையாண்டுத் தோ்வுகள் அனைத்தும் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. அதன்பின், மாணவா்களுக்கு தோ்வுக்கான விடுமுறை வழங்கப்படுகிறது.  அதன்படி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு டிச. 24 முதல் ஜன.1-ஆம் தேதி வரை 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுப்பு முடிந்து ஜன. 2 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இந்த விடுமுறை நாள்களிலேயே கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post