6th Social Lesson 8 - சமத்துவம் பெறுதல் - ( samathuvam Peruthal ) | Term 1

6th Social Lesson 8 - சமத்துவம் பெறுதல் - ( samathuvam Peruthal ) | Term 1



பாடம்.8 சமத்துவம் பெறுதல் Book back Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பின்வருவனவற்றுல் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல

a. சமூகமயமாக்கல்

b. பொருளாதார நன்மைகள்

c. அதிகாரத்துவ ஆளுமை

d. புவியியல்

விடை : புவியியல்

2. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

a. பாலின பாகுபாடு

b. சாதி பாகுபாடு

c. மத பாகுபாடு

d. சமத்துவமின்மை

விடை :  பாலின பாகுபாடு

3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது

a. திரைப்படங்கள்

b. விளம்பரங்கள்

c. தொலைகாட்சி தொடர்கள்

d. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

4. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்

a. இந்தியா 2020

b. அக்கினிச்சிறகுகள்

c. எழுச்சி தீபங்கள்

d. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

5.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

a. 1997

b. 1996

c. 1995

d. 1994

விடை : 1997

6.  விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு

a. 1995

b. 1986

c. 1987

d. 1998

விடை : 1998

7. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு

a. செஸ்

b. மல்யுத்தம்

c. கேரம்

d. டென்னிஸ்

விடை : கேரம்

8. “அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படடியில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?

a. 14(1)

b. 15(1)

c. 16(1)

d. 17(1)

விடை : 15(1)

9.  பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

a. 1990

b. 1989

c. 1986

d. 1987

விடை : 1990

10. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்

a.  நாமக்கல்

b. சேலம்

c. கன்னியாகுமரி

d. சிவகங்கை

விடை : கன்னியாகுமரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ___________________ என்பது மற்றவர்களைப்பற்றி எதிமறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.

விடை : ஒத்தகருத்து

2. ___________________ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தார்.

விடை : இராமேஸ்வரத்தில், 1931

3. இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் ___________________

விடை : விஸ்வநாதன் ஆனந்த்

4. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் __________________ 

விடை : டாக்டர் B.R. அம்பேத்கர்

5. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் __________________ 

விடை : தர்மபுரி

III. பொருத்துக:

1. பாரபட்சம்           -தீண்டாமை ஒழிப்பு

2. ஒத்தக் கருத்து உருவாதல்  -   மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது

3. பாகுபாடு                    -  சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

4. பிரிவு 14                 -   தவறான பார்வை அல்லது தவறான கருத்து

5. பிரிவு 17                         - பிறரை பற்றி எதிமறையாக மதிப்பிடுதல்

விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

IV. வினாக்களுக்கு விடையளி

1. பாரபட்சம் என்றால் என்ன?

• பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.

• அவர்களைப் பற்றி அறிந்து காெள்ளாமலேயே தவறான முன்முடிவு எடுப்பதாகும்.

• மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துகளையும் காெண்டிருக்கும் பாேது பாரபட்சம் ஏற்படுகிறது.

2. ஒத்த கருத்து என்றால் என்ன?

• ஒத்த கருத்து என்பது தவறான கண்ணாேட்டம் அல்லது ஏதாே ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.

• பாலின அடிப்படையில் ஒத்த கருத்துகளை பற்றி திரைப்படங்கள் மற்றும் தாெலைக்காட்சி தாெடர்களில் சித்தரிக்கப்படுவதைக் காணலாம்.

3. பாகுபாடு என்றால் என்ன?

• சமத்துவமின்மை என்பது ஒருவர் மற்றாெருவரை பாகுபாட்டுடன் நடத்துவதாகும்.

• சாதி ஏற்றத்தாழ்வு, சமய சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு பாேன்ற ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது.

4.  இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றி கூறுகிறது?

• இந்திய அரசியலசமப்பின் 14வது சட்டப்பிரிவு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறது.

• மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17ன் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது.

V. விரிவான விடையளி

1. பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.

• சமூகமயமாக்கல்

• நிர்ணயிக்கப்பட்ட நடத்தை

• பொருளாதார பயன்கள்

• சர்வாதிகார ஆளுமை

• இன மையக் கொள்கை

• கட்டப்பாடான குழு அமைப்பு

• முரண்பாடுகள்

2. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

சாதி பாகுபாடு

• சாதி முறை சமத்துவமின்மைக்கு மற்றும் பாகுபாட்டிற்கான முக்கிய காரணமாகும்

• இதனை எதிர்த்து பேராடியவர்களில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் குிறப்பிடத்தக்கவர் ஆவார்

பாலின பாகுபாடு

• பாலின பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஏற்படும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம், அரசியல் சமத்துவமின்மையை குறிக்கிறது

3. இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி.

• அனைவருக்கும் தரமான உடல் நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்

• தவறான பாலின பாரபட்சத்தை தெரிந்து கொள்ளுதல்

• பாெது வாழ்வில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்

• எல்லா சமயங்களைப் பற்றி தெரிந்து காெள்ளும் மனப்பான்மை

• வகுப்பறையில் குழுக்களாக உணவு அருந்துதல் மூலம் சாதி, மத, பாலின பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றிணைக்கச் செய்தல்

• சட்டங்களை முறையாக அமுல்படுத்துதல் பாேன்றவற்றால் சமுதாயம் மேம்பட வாய்ப்புகள் உருவாகும்.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post