Half yeraly Question Paper 2023, Important
12th Half Yearly Question Paper 2023
11th Half Yearly Question Paper 2023
10th Half Yearly Question Paper 2023
9th Half Yearly Question Paper 2023
8th Half Yearly Question Paper 2023
7th Half Yearly Question Paper 2023
6th Half Yearly Question Paper 2023
  • 10th All subjects - Second Mid-Term Test Question paper 2023
  • 12th All subjects - 2nd Mid-Term Question paper 2023
  • 11th All subjects 2nd Mid-Term Test Question paper 2023
  • 9th 2nd Mid-Term Test Question paper 2023
  • 8th All subjects Second Mid-Term Question paper 2023
  • 💯 6th - 12th 2nd Mid Term Test Time table 2023 - Syllabus
  • 6th 2nd Mid-Term Test Question paper 2023
  • 6th Social Lesson 3 - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை | Term 2

    6th Social Lesson 3 - குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை | Term 2


    பாடம்.3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Book Back Answers

    I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

    1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

    a. அங்கம்

    b. மகதம்

    c. கோசலம்

    d. வஜ்ஜி

    விடை : மகதம்

    2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

    a. அஜாதசத்ரு

    b. பிந்து சாரா

    c. பத்மநாப நந்தா

    d. பிரிகத்ரதா

    விடை : பிந்து சாரா

    3. கீழ்க்காண்பவற்றில் எது மெளரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

    a. அர்த் சாஸ்திரம்

    b. இண்டிகா

    c. முத்ராராட்க்ஷம்

    d. இவையனைத்தும்

    விடை : இவையனைத்தும்

    4. சந்திரகுப்த மெளரியர் அரியணையைத் துறந்து _________என்னும் சமணத் துறவியோடு சரவணபெகோலாவுக்குச் சென்றார்.

    a. பத்ரபாகு

    b. ஸ்துலபாகு

    c. பார்ஸவநாதா

    d. ரிஷாநாதா

    விடை : பத்ரபாகு

    5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் __________

    a. டாலமி

    b. கெளடில்யர்

    c. ஜெர்சக்ஸ்

    d. மெகஸ்தனிஸ்

    விடை : மெகஸ்தனிஸ்

    6. மெளரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

    a. சந்திர குப்த மொரியர்

    b. அசோகர்

    c. பிரிகத்ரதா

    d. பிந்துசாரர்

    விடை : பிரிகத்ரதா

    II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு

    1. கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.

    காரணம் : தர்மத்தின் கொள்கையின்படி, அவர் ஆட்சி புரிந்தார்.

    a. கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

    b. கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    c. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு

    d. கூற்று தவறு; ஆனால் காரணம் சரி

    விடை : கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

    2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.

    2. கூற்று 1 : ஒட்டு மொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மெளரியர் ஆவார்.

    கூற்று 2 : மெளரியரின் நிர்வாகம் பற்றிய செய்திககள அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.

    a. 1 மட்டும்

    b. 2 மட்டும்

    c. 1,2 ஆகிய இரண்டும்

    d. 1ம் இல்லை 2ம் இல்லை

    விடை : 2 மட்டும்

    3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.

    1. மகத்தின் முதல் அரசர் சந்திரகுப்தர் மெளரியர்

    2. ராஜகிரிகம் மகத்தின் தலைநகராய் இருந்தது.

    a. 1 மட்டும்

    b. 2 மட்டும்

    c. 1 மற்றும் 2

    d. 1 ம் இல்லை 2ம் இல்லை

    விடை : 2 மட்டும்

    4. கீழ்க்காண்பனவற்கைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.

    a. நந்தா – சிசுநாகா – ஹரியங்கா – மெளரியா

    b. நந்தா – சிசுநாகா – மெளரியா – ஹரியங்கா

    c. ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா

    d. சிசுநாகா – மெளரியா – நந்தா – ஹரியங்கா

    விடை : ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா

    5. கீழ்க்கண்டவற்றில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று.

    1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்

    2. அடர்ந்த காடுகள் மரங்ககளயும், யானைகளையும் வழங்கின.

    3. கடலின் மீதான ஆதிக்கம்

    4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்

    a. 1,2 மற்றும் 3 மட்டும்

    b. 3 மற்றும் 4 மட்டும்

    c. 1,2 மற்றும் 4 மட்டும்

    d. இவையனைத்தும்

    விடை : 3 மற்றும் 4 மட்டும்.

    III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    1. ________________ மகத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.

    விடை : ராஜகிரகம்

    2.  முத்ராட்சசத்தை எழுதியவர் ________________

    விடை: விசாகதத்தர்

    3.  ________________ பிந்துசாரரின் மகனாவார்.

    விடை: அசோகர்

    4. மெளரியப் பேரரசை தோற்றுவித்தவர் ________________

    விடை: சந்திரகுப்த மௌரியர்

    5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ________________ பணியமர்த்தப்பட்டனர்.

    விடை : தர்ம மகாமாத்திரர்கள்

    IV. சரியா ? தவறா ?

    1. தேவனாம்பிர்இயா எனும் பட்டம் சந்திரகுப்த மெளரியருக்கு வழங்கப்பட்டது

    விடை : தவறு

    2. அசோகர் கலிங்கப்பாேரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்

    விடை : தவறு

    3. கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்

    விடை : சரி

    4. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப்பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்

    விடை : தவறு

    5. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன

    விடை : சரி

    V. பொருத்துக

    1. கணா      -அர்த்தசாஸ்திரம்

    2. மெகஸ்தனிஸ்      -மதச் சுற்றுப்பயணம்

    3. சாணக்கியா      -மக்கள்

    4. தர்ம யாத்திரை      -இண்டிகா

    விடை : 1 – இ, 2 – ஈ, 3-அ, 4-ஆ

    VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

    1. மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகனளக் குறிப்பிடவும்.

    1.  மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா

    2. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

    2. ஸ்தூபி என்றால் என்ன?

    ஸ்தூபியானது செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்காேள வடிவமுடைய குவிமாடம் பாேன்ற அமைப்பாகும். புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    3. மகத அரச வம்சங்களின் பெயர்கனளக் குறிப்பிடுக.

    • ஹரியங்கா வம்சம்

    • சிசுநாக வம்சம்

    • நந்த வம்சம்

    • மெளரிய வம்சம்

    4. மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?

    • நிலங்களே அரசுக்கு வருவாயை ஈட்டித்தந்தது.

    • மொத்த விளைச்சலில் 1/6 பங்கு (பாகா) நிலவாரியாக வசூல் செய்யப்பட்டது.

    • காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள்

    • அரசுக்கு கூடுதல் வருவாயாக அமைந்தன.

    5. நகரங்களின் நிர்வாகத்தில் ‘நகரிகா’ வுக்கு உதவியவர் யார்?

    நகர நிர்வாகம் ‘நகரிகா’ என்னும் அதிகாரியின் கீழிருந்தது, அவருக்கு ஸ்தானிகா, காேபா எனும் அதிகாரிகள் உதவி செய்தனர்.

    6. அசாேகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?

    அசாேகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறை கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சாேழர், கேரளபுத்திரர் ஆகியாேரையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றன.

    7. மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக?

    மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்.

    VII. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

    1. பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசாேகர் என்ன செய்தார்?

    • அசாேகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்த்தைப் பரப்புவதற்காக இல்ங்கைகக்கு அனுப்பி வைத்தார்.

    • தர்மத்தின் காெள்கைகளைப் பரப்புவதற்காக மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐராேப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப்பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.

    • அசாேகர் தர்ம- மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

    • பேரரசு முழுவதிலும் பௌத்த மதத்தைப் பரப்புவதே அவர்களுடைய பணியாகும்.

    • அசாேகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.

    2. மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.

    • மகதம் கங்கைச் சமவெளியின் கீப்பகுதியில் அமைந்து இருந்தது. வளம் மிகுந் இந்தச் சமவெவளி வேளாண் விளைச்சலடி அதிகரித்தது. இது அரசுக்கு நிலையான, கணிசமான வருமானத்தை அளித்தது.

    • அடர்ந்த காடுகள் கட்டுமானங்களுக்குத் தேவையான ரகங்களையும் படைகளுக்குத் தேவையான யானைகளையும் வழங்கின.

    • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் காெள்ளவும் அவர்களுக்கு உதவியது


    Post a Comment

    கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

    குறிப்பு:

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
    -அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

    Previous Post Next Post

    POST ADS1

     

    POST ADS 2

    Half yeraly Question Paper 2023, Important
    12th Half Yearly Question Paper 2023
    11th Half Yearly Question Paper 2023
    10th Half Yearly Question Paper 2023
    9th Half Yearly Question Paper 2023
    8th Half Yearly Question Paper 2023
    7th Half Yearly Question Paper 2023
    6th Half Yearly Question Paper 2023