12th Tamil Public Exam Answer Key 2022 (5-5-2022)

12th Tamil Public Exam Answer Key 2022 (5-5-2022)

  • 12th Tamil Public Exam Original Question Paper 2022 (5-5-2022) - Download Here 
  • 12th English Public Exam Model Question Paper 2022 - Download Here

12th Tamil Public Exam Answer key 2022

  • விடைகள் தெளிவாகவும், குறிப்பிட்ட அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

1. தமிழில் திணைப் பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

(அ) தொடர்க் குறிப்பு

ஆ)பொருட் குறிப்பு

(இ) எழுத்துக் குறிப்பு

(ஈ) சொற் குறிப்பு

2. திருக்குறளில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை 

(அ) 9

(ஆ) 7

(இ) 3

3.''மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்" இவ்வரிகள் இடம் பெறும் நூல்

(அ) புறநானூறு

(ஆ) கலிங்கத்துப்பரணி

(ஈ) நாலடியார்

(இ)தமிழ் விடு தூது

4. உவமைக்கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர்

(அ) பாரதிதாசன் 

ஆ) பாரதியார்

(இ) வாணிதாசன்

(ஈ) சுரதா

5.உரிமைத்தாகம் என்னும் கதையை எழுதியவர்

(அ) உத்தம சோழன்

ஆ)பூமணி

(இ) ஐராவதம் மகாதேவன்

(ஈ) முகமது மீரான்

6. 'நடிப்புலகின் சக்கரவர்த்தி' என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் 

(அ) நம்பியார்

(இ) முத்துராமன்

(ஆ) ஜெமினி கணேசன் 

(ஈ) சிவாஜி கணேசன்

7.'காய்நெல்' - என்பதன் இலக்கணக் குறிப்பு

(அ) வினைத்தொகை

(ஆ) பண்புத்தொகை

(இ) உம்மைத்தொகை

(ஈ) உவமைத்தொகை

8.''தமிழ்க்குயிலே! கூவி வா, வா!' எனக் கூறியவர்:

(அ) சிற்பி பாலசுப்ரமணியம்

(ஆ) பாரதியார்

(ஈ) பாரதிதாசன்

(இ) சுரதா

9. பகைவராலும் அழிக்க முடியாத அரண் 

அ)அறிவு

(ஆ) நட்பு

(இ) படை

(ஈ) செல்வம்

10. வேடுவர் தலைவன் 

(அ) சுக்ரீவன்

(ஆ) குகன்

(இ) இராமன்

(ஈ) வீடணன்

11. உபாத்தியாயர் என்ற சொல் யாரைக் குறிக்கும்?

(அ) நடிகர்

(ஆ) கணக்கர்

(இ) ஆசிரியர்

(ஈ) மருத்துவர்

12.குடிமக்கள் காப்பியம்' என்று அழைக்கப்படும் நூல்

(அ)சிலப்பதிகாரம் 

இ) வளையாபதி

(ஆ) கம்பராமாயணம்

(ஈ) இரட்சணிய யாத்திரிகம்

13. 'இலக்கியத்தில் மேலாண்மை' என்னும் நூலின் ஆசிரியர் :

(அ) பக்தவத்சல பாரதி

(இ) தி.சு. நடராசன்

ஆ)வெ. இறையன்பு

(ஈ) அய்யப்ப மாதவன்

14.அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்

(அ) முத்துவீரியம்

(ஆ) தொல்காப்பியம்

(ஈ) வீர சோழியம்

(இ) தண்டியலங்காரம்

பகுதி - II

பிரிவு-1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

15. சூரிய ஒளி பட்டவுடன் நகரம் எவ்வாறு மாறியதாக அய்யப்ப மாதவன் குறிப்பிடுகிறார் ?

  • பட்டைதீட்டிய வெள்ளை வைரமாகிறது

16. எதிர்பாராத விருந்தினராக ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது ?

ஓர் ஆனந்தம், 

சற்று மனச்சோர்வு, 

சிறிது அற்பத்தனம், 

சிறிய விழிப்புணர்வு 

என்ற ஏதாவது ஒருவர் எதிர்பாராத விருந்தாளியாக வந்து செல்வார்.என்று ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துகிறார்.

17. சினத்தை ஏன் காக்க வேண்டும்?

18. இறைமகனார் அடைந்த துன்பத்தைக் கண்டு மக்கள் எவ்வாறு வருந்தினார்கள்?

பிரிவு - 2

  • எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.

19. மொழியின் இயல்பு வழக்குகளைக் கலை வழக்குகளாக மாற்றுபவை எவை ?

20. குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படையாக இருப்பது எது ?

21. எழுதுவதற்குரிய எழுத்தாணிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

பிரிவு - 3

  • எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

22. பொருள் வேறுபாடறிந்து தொடரமைக்க :

கான், காண்

23. தொடரில் உள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக. பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்

24. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

புள்ளைக்கு உடம்பு சரியில்லை. மூணு நாளா சிரமப்படுது.

பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை . மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.

25. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

(அ) பலகை

(ஆ) கோவில்

26. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன வானம் பார்த்த பூமியை பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

27. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

(அ) அறுத்து

(ஆ) கண்டான்

காண் (கண்) +ட் + ஆன்

அறு+த்+த்+உ

28. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.

(அ) முன்னுடை

(ஆ) பூம்பாவாய்

 29. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க.

முன்

அவன் முன் வந்து கூறினான்

அவன்முன் வந்து கூறினான்

30. கலைச்சொல்லாக்கம் தருக.

(அ) Mobile Banking

அலைபேசி வழி பரிவர்த்தனை

(ஆ) Biography

பகுதி - III

பிரிவு - 1

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.

31. 'தன்னேர் இலாத தமிழ்' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

32. சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.

கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையை சிறை எடுத்துச் சென்றபோது அவனைத் தடுத்து, அவனோடு போரிட்டு இறந்தார் .

*தன் தந்தையின் நண்பனான சடாயுவிற்கு தன் தந்தைக்குரிய தகுதியைக் கொடுத்து இறுதிச் சடங்குகளைச் செய்தான் ராமன்.

*இப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இசை'' என்று கண்டவர் வியக்கும் படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான்.

*தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான் பூக்களையும் கொண்டு வந்து தூவினான் மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான்.

*நன்னீரையும் எடுத்து வந்தான்

* இறுதிச் சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.

33. வள்ளலார் கந்த கோட்டத்து இறைவனிடம் வேண்டுவதை தெய்வமணி மாலை பாடல் வழி விளக்குக.

34. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.

பிரிவு-2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

35. 'படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை" -இப்பாடலில் ஒலிக்கோலங்களின் பண்பை விளக்குக.

36. இன்றைய கூட்டுக் குடும்பம், பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே' - விளக்குக.

37. பண்டைக்கால பள்ளிக்கூடங்களில் பின்பற்றப்பட்ட குறிப்பிடத்தக்க நடைமுறைகள் யாவை?

38. உழவுத்தொழிலில் மேலாண்மை குறித்து நீவிர் அறிந்தனவற்றை எழுதுக.

பிரிவு -3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

39. (அ) உவமையணியைச் சான்றுடன் விளக்குக.

அல்லது

(ஆ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

40. இலக்கிய நயம் பாராட்டுக.

(மையக்கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக) பிறப்பினால் எவர்க்கும் - உலகில்

பெருமை வாராதப்பா!

சிறப்பு வேண்டுமெனில் -நல்ல

செய்கை வேண்டுமப்பா! நன்மை செய்பவரே - உலகம்

நாடும் மேற்குலத்தார்!

தின்மை செய்பவரே அண்டித்

தீண்ட ஒண்ணாதார்!

-கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

41. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக..

(அ) யானைக்கும் அடி சறுக்கும்

அல்லது

(ஆ) ஊழி பெயரினும் தாம் பெயரார்

42. (அ) பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.

அல்லது

(ஆ) செவியறிவுறூஉத் துறையைச் சான்றுடன் விளக்குக.

43. தமிழாக்கம் தருக.

1. Learning is a treasure that will follow its owner everywhere.

2. A new language is a new life.

3. Knowledge of languages is the doorway to wisdom.

4.The limits of my language are the limits of my world.

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

44. (அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றை தொகுத்து எழுதுக.

இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார் .

*செம்மை மிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.

 *உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் காணப்படுகிறது.

*இக்காட்சி எல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே என் துணை வேண்டும்.

*பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!

* தமிழே! நீ பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய் .பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.

*உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ் குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா! என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.

அல்லது

(ஆ) அறிவுடைமை வாழ்வின் உயர்விற்குத் துணை நிற்கும் என்பதை வள்ளுவம் வழி நின்று விளக்குக.

45. (அ) பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.

அல்லது

(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு ? விளக்குக.

46. (அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

அல்லது

(ஆ) உங்கள் பகுதியில் வாழ்ந்து வரும் கலைஞர் ஒருவரை நேரில் கண்ட அனுபவத்தை விளக்குக.

பகுதி - V

47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக

(அ) "இதில் வெற்றி பெற" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'விண் வேறு' எனத் தொடங்கும் மனப்பாட பாடலை அடிபிறழாமல் எழுதுக.

(ஆ) அரிது' என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.

1 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post