TNPSC குரூப் 2, 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு

TNPSC குரூப் 2, 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு..



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், TNPSC இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

TNPSC முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இந்த வகையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகின்றன.கொரோனா தாக்கம் கடந்த 2 வருடங்களில் அதிகரித்து வந்ததால் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளிவரவில்லை.


இதனை தொடர்ந்து தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் TNPSC தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் குரூப் 2 தேர்வு அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலும், மற்றும் குரூப் 4 தேர்வு அறிவிப்பு 2022 மார்ச் மாதத்திலும் வெளியாகும் என்று TNPSC தெரிவித்துள்ளது. மேலும் TNPSC தேர்வு முறைகள் மற்றும் பாடத்திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் தமிழ் மொழி தகுதித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குரூப் 2, 4 VAO தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் TNPSC அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/English/new_syllabus.html) வெளியிடப்பட்டுள்ளது. எனவே TNPSC தேர்வுக்கு தயாராகி வருவோர் இணையதளத்திற்கு சென்று பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை பார்த்து பயனடையலாம்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post