தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி உதவித்தொகை..


தமிழக பள்ளி மாணவர்கள் ‘ப்ரீ மெட்ரிக்‘ மற்றும் ‘போஸ்ட்மெட்ரிக்‘ கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை:

இந்தியாவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் போன்ற பள்ளி மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை மேல் நிலை வகுப்பு மற்றும் கல்லூரி படிப்பு முடியும் வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்க, பயிலும் பள்ளியின் மூலம் அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி உதவித்தொகை ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இதன் மூலம் பழங்குடியின மாணவர்கள் கற்றலில் இடை நிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பெற ஊக்கம் பெருகின்றனர்.

தற்போது அரசு சார்பாக கல்வி உதவித்தொகை ‘ப்ரீ மெட்ரிக்‘ மற்றும் ‘போஸ்ட்மெட்ரி என்று பிரிக்கப்பட்டு வழங்கப்டுகிறது. ப்ரீ மெட்ரிக் என்பது 9,10 வகுப்பு, போஸ்ட் மெட்ரிக் என்பது 10ம் வகுப்புகளுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஆகும். தற்போது 2021-2022ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவர்கள் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரேவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 9ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கப்படவுள்ளது.

அதனால் உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து விண்ணப்பத்தை பெற்று அதை உரிய முறையில் பூர்த்தி செய்து அதனுடன் சாதிச் சான்று, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து பிப்ரவரி 10ம் தேதிக்குள் கல்வி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். மேலும், , escholarship.tn.gov.in  என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post