7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.2 கவின்மிகு கப்பல்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

அ) நிலம்

ஆ) நீர்

இ) காற்று

ஈ) நெருப்பு

Answer:

இ) காற்று

2.மக்கள் ………………….. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

அ) கடலில்

ஆ) காற்றில்

இ) கழனியில்

ஈ) வங்கத்தில்

Answer:

ஈ) வங்கத்தில்

 3.புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது ……………….

அ) காற்று

ஆ) நாவாய்

இ) கடல்

ஈ) மணல்

Answer:

இ) கடல்

 4.பெருங்கடல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பெரு + கடல்

ஆ) பெருமை + கடல்

இ) பெரிய + கடல்

ஈ) பெருங் + கடல்

Answer:

ஆ) பெருமை + கடல்]

 5.இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …….

அ) இன்று ஆகி

ஆ) இன்றி ஆகி

இ) இன்றாகி

ஈ) இன்றா ஆகி

Answer:

இ) இன்றாகி

 6.எதுகை இடம்பெறாத இணை ………..

அ) இரவு – இயற்கை

ஆ) வங்கம் – சங்கம்

இ) உலகு – புலவு

ஈ) அசைவு – இசைவு

Answer:

அ) இரவு – இயற்கை

பொருத்துக

1. வங்கம் – பகல்

2. நீகான் – கப்பல்

3. எல் – கலங்கரை விளக்கம்

4. மாட ஒள்ளெரி – நாவாய் ஓட்டுபவன்

Answer:

1. வங்க ம் – கப்பல்

2. நீகான் – நாவாய் ஓட்டுபவன்

3. எல் – பகல்

4. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

குறுவினா

 1.நாவாயின் தோற்றம் எவ்வாறு இருந்ததாக அகநானூறு கூறுகிறது?

Answer:

நாவாயின் தோற்றம் : உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய் என்று அகநானூறு நாவாயின் தோற்றத்தைப் பற்றி கூறுகிறது.

 2.நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணை செய்கிறது?

Answer:

இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தி நாவாய் ஓட்டிகளுக்கு உறுதுணையாக நிற்கிறது.

சிறுவினா

கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?

Answer:

  • உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய்.
  •  அந்த நாவாய் புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
  • இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற கடற்காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்த பெரிதும் துணை புரிகின்றது.
  • உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான் என்று அகநானூறு கடலில் கப்பல் செல்லும் காட்சியை விளக்குகிறது.

சிந்தனை வினா

தரைவழிப் பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?

Answer:

  • நான் விரும்பும் பயணம் கடல்வழிப் பயணம்.
  • ஏனென்றால் கடலில் செல்லும் போது கடலில் வீசும் இதமான காற்று உடலை வருடிச் செல்லும். மேலும் கீழுமாக தாவிச் செல்லும் அலைகள் காண்பதற்கு கவினுற அமைந்திருக்கும்.
  • கடலில் வாழும் பல்வகை மீன்கள் கடல் நீரில் நீந்திச் செல்லும் காட்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
  • இரவு நேரத்தில் கப்பலிலிருந்து ஆகாயத்தைப் பார்க்கும் போது பல்வகை விண்மீன்கள் மற்றும் நிலவு நம்முடனே பயணிப்பது போன்ற தோற்றம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

கற்பவை கற்றபின்

1.கடலில் கிடைக்கும் பொருள்களின் பெயர்களைத் தொகுக்க.

Answer:

  • கடலில் கிடைக்கும் பொருட்களின் பெயர்கள் :
  • பல்வகை மீன்கள், சிப்பிகள், சங்குகள், நண்டுகள் கடலின் மூலம் கிடைக்கின்றன.
  • சுண்ணாம்பு. மணல், சரளை போன்ற பொருட்கள் மற்றும் கடல் அடிவாரத்தில் கரைந்துள்ள கனிமங்கள்.
  • கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு.
  • கடல் நீரில் இருந்து உப்பு கிடைக்கிறது.
  • கடல்வாழ், உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய யூனியோ, க்வாட்ருலா என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.
  • ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும். முத்தை அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல் சூடு நீங்கும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 2.கடற்பயணம் பற்றிய சிறுகதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.

Answer:

மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. உரு – அழகு

2. வங்கம் – கப்பல்

3. போழ – பிளக்க

4. எல் – பகல்

5. வங்கூழ் – காற்று

6. கோடு உயர் – கரை உயர்ந்த

7. நீகான் – நாவாய் ஓட்டுபவன்

8. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post