8th Tamil Refresher Course Topic 8 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

8th Tamil Refresher Course Topic 8 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

8th Tamil Refresher Unit 8 : புதிர்களுக்கு விடையளித்தல் 

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

புதிருக்கான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(பட்டுக் கோட்டை , நூலகம், மூங்கில்காடு, பாரதியார் , பாய்மரக்கப்பல்)

1. முதலெழுத்து பாடலின் வேறு பெயரைக் குறிக்கும். 

முதல் எழுத்துடன் அடுத்த இரண்டும் சேர்ந்தால் பெயரைக் குறிக்கும். 
 இறுதி இரண்டு எழுத்துகள் வினாச் சொற்களைக் குறிக்கும். இம்மூன்று புதிர்களும் சேரக் கிடைப்பது. தமிழ்க்கவிஞர்களில் ஒருவரின் பெயர் . யார் அவர்? 

  • பாரதியார் 

2. முதல் மூன்று எழுத்துகள் காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவதைக் குறிப்பது. 

 இறுதி மூன்றெழுத்துகள், அரசனின் பாதுகாப்பு அரணை இவ்வாறும் அழைப்பர் .

இவ்விரண்டும் சேர்த்தால் கிடைப்பது ஓர் ஊரின் பெயர் .

அது எந்த ஊர்?

  • பட்டுக்கோட்டை

3.  முதல் நான்கு எழுத்துகள், புல்லாங்குழல் செய்யப் பயன்படுவதைக் குறிக்கும். 

 இறுதி இரண்டு எழுத்துகளைக் கூட்டினால் மரம், செடி கொடிகள் நிறைந்த பகுதியைக் குறிக்கும்.

அது என்ன? ________________

  • மூங்கில் காடு

4.  முதல் இரண்டு எழுத்துகள் உறங்குவதற்கு உதவுவது. 

 இடையில் உள்ள மூன்றெழுத்துகள் உயிர்வாழ்வதற்கான காற்றைத் தருவது. 

 இறுதி நான்கு எழுத்துகள் கடலில் பயணிக்க உதவுவது.

அது என்ன? 

  • பாய்மரக் கப்பல்

5.  முதல் இரண்டு எழுத்துகள் மாணவர் கைகளில் தவழ்வது.

 இறுதி மூன்று புறம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்.

அது என்ன? 

  • நூலகம்

மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஆந்தை , மயில், கொக்கு, அணில், பாம்பு)

1. நான் ஓர் அழகு தேவதை ; ஆடும் தேவதை . நான் யார் ?

  • மயில்

2. வளைவேன் , நெளிவேன் , வயிறு கலங்க வைப்பேன் . நான் யார் ?

  • பாம்பு

3. மரத்திற்கு மரம் தாவுவேன் . முதுகில் மூன்று கோடுகள் கொண்டிருப்பேன் . நான் யார் ?

  • அணில்

4. நான் ஒற்றைக்காலில் நிற்கிறேன் . ஓடையிலே மீன் பிடிக்கிறேன் . நான் யார் ?

  • கொக்கு

5. பகலில் துயில்வேன் . இரவில் அலறுவேன் . நான் யார் ?

  • ஆந்தை

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(காளான் , எலுமிச்சம்பழம், தர்பூசணி, வெண்டைக்காய், மாதுளம்பழம்)

1. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?

  • வெண்டைக்காய்

2. வெளியே பார்த்தால் பச்சை ; வெட்டிப் பார்த்தால் சிவப்பு; சுவைத்துப் பார்த்தால் இனிப்பு அது என்ன?

  • தர்பூசணி

3. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மஞ்சள் குருவி ஊசலாடுது?

  • எலுமிச்சம்பழம்

4. சொம்பு நிறையக் கம்பு அது என்ன?

  • மாதுளம்பழம்

5. மழைக்காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார் ?

  • காளான்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post