7th Tamil Term 1 Chapter 2.6 திருக்குறள் Book back Answer

7th Tamil Term 1 Chapter 2.6 திருக்குறள்

அழுக்காறாமை

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

தெளிவுரை : ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க

நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.

2. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

தெளிவுரை : பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை

இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்

புறங்கூறாமை

3. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க

முன்இன்று பின்நோக்காச் சொல்.

தெளிவுரை : ஒருவருக்கு நேர்நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும்

சொல்லலாம். ஆனால், அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது.

4. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

தெளிவுரை : பிறருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும்

காண்பவருடைய வாழ்வில் துன்பம் இல்லை.

அருளுடைமை

5. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

தெளிவுரை : அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும்.

பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.

6. வலியார்முன் தன்னை நினைக்காதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.

தெளிவுரை : ஒருவர் தன்னைவிட மெலிந்தவரை துன்புறுத்தும்போது, தன்னைவிட

வலிமையுடையவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தல் வேண்டும்

வாய்மை

7. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

தெளிவுரை : வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச்

கூறுதல் ஆகும்.

8. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

தெளிவுரை : ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக்கூடாது. அவ்வாறு கூறினால்

அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.

9. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

தெளிவுரை : உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில்

எல்லாம் இருப்பவர் ஆவார்.

இறைமாட்சி

10. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு.

தெளிவுரை : பொருள் வரும் வழிகளை அறிதலும், அவ்வழிகளில் பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்த பொருளைப் பாதுகாத்தலும், காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதலும் சிறந்த அரசின் செயலாகும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.வாய்மை எனப்படுவது.

அ) அன்பாகப் பேசுதல்

ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்

இ) தமிழில் பேசுதல்

ஈ) சத்தமாகப் பேசுதல்

Answer:

ஆ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல்


2.…… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

அ) மன்ன ன்

ஆ) பொறாமை இல்லாதவன்

இ) பொறாமை உள்ளவன்

ஈ) செல்வந்தன்

Answer:

ஈ) பொறாமை உள்ளவன்

 3.‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..

அ) பொரு + செல்வம்

ஆ) பொருட் + செல்வம்

இ) பொருள் + செல்வம்

ஈ) பொரும் + செல்வம்

Answer:

இ) பொருள் + செல்வம்

 4.‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) யா + எனின்

ஆ) யாது + தெனின்

இ) யா + தெனின்

ஈ) யாது + எனின்

Answer:

ஈ) யாது + எனின்

5.தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……..

அ) தன் நெஞ்சு

ஆ) தன்னெஞ்சு

இ) தானெஞ்சு

ஈ) தனெஞ்சு

Answer:

ஆ) தன்னெஞ்சு

6.தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….

அ) தீதுண்டோ

ஆ) தீது உண்டோ

இ) தீதிண்டோ

ஈ) தீயுண்டோ

Answer:

அ) தீதுண்டோ

7/சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்தி எழுதுக.

அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.

ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.

இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.

ஈ) பொருள்களைச் சேர்த்தல்.

Answer:

1. பொருள் வரும் வழிகளை அறிதல்

2. பொருள்களைச் சேர்த்தல்

3. சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்

4. பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.

குறுவினா

1.எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?

Answer:

(i) ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக் கூடாது.

(ii) அவ்வாறு கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.

2.வாழும் நெறி யாது?

Answer:

  • ஒருவர் தன் நெஞ்சில் பொறாமை இல்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.

3.உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?

Answer:

  • உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர்  ஆவார


1) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்  செல்வத்துள் எல்லாம் தலை.

2) அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்  பூரியார் கண்ணும் உள.

பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடு

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த  தக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள்  எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

1. ஒழுக்காறக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

Answer:

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

கூடுதல் வினாக்கள்

1.தமிழ் நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?

Answer:

  • தமிழ் நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள்.

2.திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது.

Answer:

  • அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post