12th Tamil Refresher Course unit 22 Answer key - Topic 22 பா இயற்றப் பழகலாம்

12th Tamil Refresher Course unit 22 Answer key - Topic 22 பா இயற்றப் பழகலாம்

Topic 22 பா இயற்றப் பழகலாம்

12th Tamil Refresher Course Answer key Topic 22 பா இயற்றப் பழகலாம், 12th Tamil Refresher Course Answer key Topic 22, 12th Tamil All Topic Refresher Course Answer key, 12th Refresher Course, Books,  Day Planner,  12th Refresher Course Answers.

12 ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம். கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் 22 பா இயற்றப் பழகலாம்.

12th Tamil Refresher Course unit 22 Answer key - Topic 22 பா இயற்றப் பழகலாம்

  • Class: 12 | வகுப்பு - 12 
  • Subject : Tamil | புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்  | 2021 - 2022
  • Topic : 22 பா இயற்றப் பழகலாம்
  • தலைப்பு  :  22 பா இயற்றப் பழகலாம்

 மதிப்பீடு 

Question 1. 

ஆசிரியப்பாவில் மரபுக்கவிதை ஒன்றை எழுதுக.

EXample:

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!

காசறு விரையே! கரும்பே! தேனே!

அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!

மலையிடைப் பிறவா மணியே என்கோ!

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!

யாழிடைப் பிறவா இசையே என்கோ!

தாழிருங் கூந்தல் தையால்! நின்னைஎன்(று)

உலவாக் கட்டுரை பலபா ராட்டித்

தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி

வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்

காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்கென்

- சிலப்பதிகாரம் 

 மதிப்பீடு 

Question 2. 

"வானம்"- என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதுக.

புகை கக்கும் மாசினமே
புவி வேகும் காரணமே!!!

சிகை கூட தப்பாத
சீர்கேட்டின் சாதனமே!!!

பார் மின்னும் பல்லொளியாய்
வெளிறி நின்ற வெண்மேகம்!!!
கார் துப்பும் கரும்புகையால்
கார்மேகம் ஆனதன்றோ?

சினம்கொண்ட மனம்கூட
கனம் தாழா கரைவதுபோல்..
சீற்றெழுந்த வானமவன்
காற்றழுத்தத் தாழ்வுதனை,
அம்பென்ற ஆயுதமாய்
வம்பென்று வழியனுப்ப .

சிந்துகின்ற துளியெல்லாம்
முந்திச்செல்லும் விந்தணுவாய்
கரை தாக்கும் பேரலைபோல்
பகை தீர்க்கப் பாய்ந்து வர

அம்பென்ற ஆயுதத்தை
அன்பென்ற ஆயுதமாய்
பரவச்செய்தாள் பருவமகள்.
பரவசத்தின் தெய்வமகள்.

கொட்டித்தீர்த்த பேய் மழையில்
பிணக்கோலம் காணவேண்டி,
கெட்டிமேளச் சத்தத்துடன்
மணக்கோலம் கண்டிடவே

பொய் சிரிப்பில் பொங்குகிறான்
பகை தீரப் புலம்புகிறான்

இது தரை துடைக்கும் தண்ணீர் அல்ல.
என் கரை உடைந்த கண்ணீர்.
இராச வானம்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post