10th Tamil July Month Assignment Answer key, 2nd assignment

10th Tamil July Month Assignment Answer key, 2nd assignment

TN 10th Tamil July month unit 2 Assignment Question peper and Answer key pdf Download Available ,10th Tamil 2nd Assignment Answer key.

  • 10th tamil  Unit 2 Assignment Answer key - PDF  Download - July month

  • வகுப்பு: பத்து
  • பாடம்: தமிழ்
  • ஒப்படைப்பு 2
  • இயல்- 2- இயற்கை, சுற்றுச் சூழல்


பகுதி-ஆ

L ஒரு மதிப்பெண் வினாக்கள்

1 உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படையான சூழல் எது?

அ)மலை

ஆ) இயற்கை

இ) கடல்

ஈ) காடு


2. கடுங்காற்று என்பதன் எதிர்ச்சொல் தருக.

அ) கடல் காற்று

ஆ) மென்காற்று

இ) சுழல்காற்று

ஈ) புயல் காற்று

3.வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் - எனப் பாடியவர் யார் ?

அ) ஒளவையார்.

ஆ)பாரதியார்

இ) திருவள்ளுவர்

ஈ. இளங்கோவடிகள் 

4. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள்

அ) இருத்தல்

ஆ) இரங்கல்

இ) தடல்

5. பத்துப்பாட்டு நூல்களுள் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் எது

அ) நெடுநல்வாடை 

ஆ) திருமுருகாற்றுப்படை

 இ) பட்டினப்பாலை

ஈ. முல்லைப்பாட்டு 

6. கரும்பு தின்றான் என்பது எவ்வகைத் தொடர்?

அ)வினையெச்சத் தொடர்

ஈ) விளித்தொடர்

ஆ) தொகை நிலைத் தொடர்

7. மூதூர் - இலக்கணக் குறிப்பு தருக.

அ) வினைத் தொகை

ஆ) பண்புத்தொகை

8. மை விகுதி பெறும் தொகை

அ) பண்புத்தொகை

ஆ) வேற்றுமைத் தொகை

இ) உவமைத் தொகை 

ஈ) உம்மைத் தொகை

9.கீழ்க்கண்டவற்றுள் பாரதியாரின் படைப்பு எது ?

அ) அழகின் சிரிப்பு

ஆ) பாண்டியன் பரிசு

இ) பாஞ்சாலி சபதம்

ஈ) குடும்பவிளக்கு

10. வசன கவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார் ?

அ) மு. மேத்தா

ஆ) புதுமைப்பித்தன்

இ) பாரதியார்

ஈ) நாகூர் ரூமி

பகுதி-ஆ

II. குறுவினா

11. வசன கவிதை - குறிப்பு வரைக.

  • உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்.
  • கவிதை வடிவம் வசன கவிதை எனப்படும்.
  • ஆங்கிலத்தில் Prose Poetry என்பர்.
  • தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்.

சான்று :
இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமை
யுடையது காற்றும் இனிது – பாரதியார்

12. காற்றைச் சிறப்பித்து ஒளவையார் எவ்வாறு பாடியுள்ளார் ?
  • “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்று ஒளவையார் பாடியுள்ளார்
13. நான்கு திசைகளிலிருந்து வீசக் கூடிய காற்றின்களை எழுதுக.


14. மரம் தரும் வரமாக காற்று கூறுவது யாது?

  • நானே! நீர்
  • உலகில் முக்கால் பாகம் நான்
  • நான் இல்லை என்றால் உலகம் இல்லை
  • ஆதவனின் அணைப்பில் கருவுற்று
  • மேகமாய் வளர்ந்து
  • மழையாய் பிறப்பேன் நான்
  • விண்ணிலிருந்து நான் விழுந்தால்
  • என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
  • மலையில் விழுந்து
  • நதியில் ஓடி
  • கடலில் சங்கமிக்கும்
  • சரித்திர நாயகன் நான்.

15.விரிச்சி விளக்கம் தருக.

  • ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய்,
  • தெய்வத்தைத் தொழுது நிற்பர். அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.
  • அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும்.
  • தீய மொழியைக் கூறின் தம் செயல் தீயதாய் முடியும் என்று எண்ணுவர்.


பகுதி - இ

III. நெடுவினா

16. காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

17. முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விளக்குக.

மழை:
  • மேகம் அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்பொழுது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.
தெய்வ வழிபாடு:
  • முதுபெண்கள் காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்த முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.
கன்றின் வருத்தம்:

  • சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்.
வருந்தாதே :
  • புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டி வந்துவிடுவார் வருந்தாதே’ என்றாள் இடைமகள்.
முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது :
  • இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டோம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே!

ஒப்படைப்பு      இயல்-3        பண்பாடு

பகுதி-அ

வகுப்பு-10

பாடம்:தமிழ்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. விருந்தொடு உண் இத்தொடரில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபு

இ) ஒடு

ஆ) இன் 

ஈ)ஆல்

2. உபசரித்தல் என்பதற்கான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க

அ) உணவிடுதல்

ஆ) உரையாடுதல்

ஆ) தங்கவைத்தல் 

ஈ) விருந்தோம்பல்

3.உயர்பண்பு என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க 

அ) பண்புத் தொகை 

ஆ) வினைத்தொகை

இ) வேற்றுமைத்தொகை 

ஈ)அன்மொழித்தொகை

4. விருந்தே புதுமை எனக்கூறியவர் யார்?

அ) ஒளவையார்

ஆ) தொல்காப்பியர்

இ) கம்பர்

ஈ) இளங்கோவடிகள் 

5. தனித்து உண்ணாமை என்பது.

அ) தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை செயல் 

ஆ) உணவளிக்கும் முறை

இ) விருந்தினரைச் சிறப்பிக்கும் செயல்

ஈ) விருந்தினரை வரவேற்றல்

6. Classical Literature orodrugl

அ) வட்டார இலக்கியம் 

ஆ)நாட்டுப்புற இலக்கியம்

இ) செவ்லிலக்கியம்

ஈ) பண்டைய இலக்கியம்

7. செப்பல் என்பதன் பொருள்.

அ) வருதல் 

இ) சிந்துதல்

ஆ) அழுதுதல்

(ஈ)உரைத்தல்

8. கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படும் நுல்

அ)குறுந்தொகை 

இ) மலைபடுகடாம்

ஆ) திருமுருகாற்றுப்படை 

ஈ) நற்றிணை

9. நும் இல் போல நில்லாது புக்கு இவ்வடியில் இல் என்பதன் பொருள் யாது?எது?

அ) இலவம்

இ) இல்லம்

ஆ) இலை

ஈ) இல்லை

10. பெயரெச்சத் தொடரை தேர்தெடுக்க

அ) கேட்டவர் பாடல்

இ)கேட்டுப் பாடினார்.

ஆ) கேட்ட பாடல்

ஈ) கேட்டார் பாடினார்

பகுதி-ஆ

II.குறுவினா

11. குடும்பத் தலைவியின் விருந்தோம்பல் பண்பு குறித்து நற்றிணை குறிப்பிடுவது யாது?

  • “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறுகிறது நற்றிணை .

12. பெரியபுராணம் வழியே புலப்படுத்தப்படும் விருந்தோம்பல் பற்றிய செய்தியைக் கூறுக

  • “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” என்கிறது பெரியபுராணம் .

13. அதிவீரராம பாண்டியர் -குறிப்பு வரைக.

  • பெயர் : அதிவீரராம பாண்டியன்
  • சிறப்பு : கொற்கையின் அரசர் தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தார்.
  • பட்டப் பெயர் : சீவலமாறன்
  • இயற்றிய நூல்கள் : காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், வெற்றிவேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.’

14. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?

  • ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருக்கும்.
  • அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்தும்.
  • இதுவே தொகாநிலைத் தொடர் எனப்படும்.

15. வினையெச்சத் தொடரை எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.

  • முற்றுப் பெறாத வினை (எச்சவினை) வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.
  • சான்று : பாடி மகிழ்ந்தனர்.

பகுதி-இ

III.சிறுவினா

16. விருந்தோம்பல் குறித்து காசிக்காண்டம் கூறும் ஒன்பது நல்லொழுக்கங்களை விவரிக்க 

  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
  • அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
  • வந்தவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும். மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

17. பரிசில் பெற்ற கூத்தர் மற்ற கூத்தருக்கு ஆற்றுப்படுத்தும் செய்திகளை விளக்குக

முன்னுரை:

  • அன்றைய நிலையில் பொருளுக்காக ஆற்றுப்படுத்துவது நிகழ்ந்தது. ஆனால் இன்று ஆற்றுப்படுத்தல் அதிலிருந்து விலகி வேறுபடுகின்றது.

உணவு:

  • அன்றைய பாணர்கள் கூத்தர்கள் மன்னனிடமோ, வள்ளலிடமோ ஆற்றுப்படுத்தினர். ஆனால் இன்று வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உணவு தரும் அன்னச் சத்திரங்கள் பற்றியும், அன்னதானம் நடைபெறும் இடங்களைப் பற்றியும் ஆற்றுப்படுத்துகின்றனர்.

கல்வி:

  • கல்வி கற்க முடியாதவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கும் அரசின் திட்டங்கள் பற்றியும், உதவும் தொண்டு நிறுவனங்கள் குறித்தும் இன்று பலர் வழிகாட்டல் செய்கின்றனர்.

தொழில்:

  • இன்று வேலைவாய்ப்பின்மை பெருகி வருகின்றது. அதனைப் போக்க அரசும் பொதுத்துறை நிறுவனங்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு அவை குறித்த வழிகாட்டல்கள் இன்று செய்யப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு போக்கப்படுகின்றது.

நன்னடை:

  • சமுதாயத்தில் இன்று வன்முறை பெருகியுள்ளது. இதற்குக் காரணம் சினம், பொறாமை, சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவையே! அவற்றைக் கட்டுப்படுத்த, அனைவருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தியானப் பயிற்சி செய்ய இன்று வழிகாட்டல்கள் செய்கின்றனர்.

முடிவுரை:

  • வழிகாட்டல் என்பது நெறிபிறழும் சமுதாயத்தைக் காக்க உதவும் ஒரு இன்றியமையாத கருவியாகும். வழிகாட்டலுக்கு வித்து ஆற்றுப்படுத்தல் இலக்கியங்களே சான்றாகும்.
10th std Tamil assignment Answer key,10th Tamil unit 2 Assignment Answer key ,m 10th Tamil July Month Answer key\


 

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post