> Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.6 திருக்குறள் ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

Students can Download 6th Tamil Chapter 8.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, 

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.6 திருக்குறள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.

அ) பகை

ஆ). ஈகை

இ) வறுமை

ஈ) கொடுமை

Answer:

ஆ) ஈகை

Question 2.

பிற உயிர்களின் …………….. க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.

அ) மகிழ்வை

ஆ) செல்வத்தை

இ) துன்பத்தை

ஈ) பகையை

Answer:

இ) துன்பத்தை

Question 3.

உள்ளத்தில் …………….. இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.

அ) மகிழ்ச்சி

ஆ) மன்னிப்பு

இ) துணிவு

ஈ) குற்றம்

Answer:

ஈ) குற்றம்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Question 1.

வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்

குறியெதிர்ப்பை உடைத்து நீரது.

Answer:

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

Question 2.

எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்

மாணாசெய் தலை யாமை.

Answer:

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

குறுவினா

Question 1.

அறிவின் பயன் யாது?

Answer:

  • பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதே அறிவின் பயன் ஆகும்.

Question 2.

பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?

Answer:

  • தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

Question 3.

ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?

Answer:

  • இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை அகும்.

பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க

நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

2. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை.

3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

Answer:

3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

கலைச்சொல் அறிவோம்

1. அறக்கட்டளை – Trust

2. தன்னார்வலர் – Volunteer

3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross

4. சாரண சாரணியர் – Scouts & Guides

5. சமூக சேவகர் – Social Worker

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel