9th Tamil worksheet 4 - answer - Bridge course Workbook

9th Tamil worksheet 4 - answer - Bridge course Workbook

unit 1

பயிற்சித்தாள் - 4
கற்கண்டு - தொடர் இலக்கணம்

சரியான விடையைத் தெரிவுசெய்க.

1. கந்தன் தண்ணீர் ஊற்றினான்- இத்தொடரில் தண்ணீர் என்பது
அ) செயப்படுபொருள்
ஆ) வினைப்பயனிலை
இ) பயனிலை
ஈ) எழுவாய்

விடை;அ) செயப்படுபொருள்

2. பகுபத உறுப்புகளில் பெரும்பான்மையாக இடம்பெறும் அடிப்படை உறுப்புகளைத் தெரிவுசெய்க.

அ) பகுதி, விகுதி
ஆ) பகுதி, சந்தி, சாரியை
இ) விகுதி, இடைநிலை, விகாரம்
ஈ) சாரியை, சந்தி, பகுதி

விடை:அ) பகுதி, விகுதி


3. ஆடினான் - இச்சொல்லின் பகுதியைத் தெரிவுசெய்க.
அ) ஆடி
ஆ) அடி.
இ) ஆடு
ஈ) ஆட்டு

விடை:இ) ஆடு

4. எடுத்துக்காட்டுடன் பொருந்தாத தொடரைத் தெரிவுசெய்க.

அ) நாள்தோறும் உடற்பயிற்சி செய்! - கட்டளைத் தொடர் 

ஆ) 'பாண்டியன் பரிசு' பாவேந்தரால் இயற்றப்பட்டது-செயப்பாட்டுவினைத்தொடர்

இ) வேலன் பாடம் படித்தான் - பிறவினைத் தொடர்

ஈ) இராமன் நாளை வாரான் -  எதிர்மறைவினைத் தொடர்.

விடை: 
இ) வேலன் பாடம் படித்தான் - பிறவினைத் தொடர்

5. வினைமரபைத் தெரிவுசெய்து வினைமுற்றாக மாற்றுக.

அ) முருகன் பால்___________(குடி/பருகு)

ஆ) யாழிசை, மாத்திரைகளை________(தின்/விழுங்கு)

இ) வேடன் பறவையை நோக்கி அம்பு ._________.(எய்/விடு)

ஈ) மலர்விழி பூ________(பறி/கொய்)

விடை : 

அ. பருகினான்

ஆ. விழுங்கினாள்

இ. எய்தான்

ஈ. கொய்தாள்

6. பொருத்தமான எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(படித்தான்,பூ, சென்றனர், வரைந்தாள்)

அ) பொற்சுவை ஓவியம்_______

ஆ. ______கொய்து வந்தார்.

இ) பரிதி கவிதையைப்_______

ஈ)ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்குச்________

விடைகள்: 

அ.வரைந்தாள்

ஆ.பூ

இ.படித்தான்

ஈ.சென்றனர்

7. தன்வினைத் தொடருக்கு ஏற்ற வினையைப் பொருத்தி எழுதுக

இணைய வகுப்பில் ஆசிரியர், பாடங்களைக் கணினி வாயிலாகக்_-________(காட்டு / காட்டுவி)

விடை : காட்டுவித்தார்

8. விளக்கத்தைப் படித்துப் புரிந்துகொண்டு பெயரடை, வினையடை அமைந்த இரண்டு தொடரை உருவாக்குக

விளக்கம்

நல்ல பாடல் ஒன்று கேட்டேன் - என்னும் தொடரில் பாடல் என்பது பெயர். இதன் அடைமொழியாகிய நல்ல என்பது பெயரடை.

பள்ளி வாகனம் மெதுவாகச் சென்றது என்னும் தொடரில் சென்றது என்பது வினை. இதன் அடைமொழியாகிய மெதுவாக என்பது வினையடை

விடைகள்: 

பெயரடை : பழுத்த பழம் வாங்கினேன்

வினையடை: கொக்கு வயலின் மெதுவாக நடந்தது.

9. செய்தித் தொடரை வினாத்தொடராக மாற்றுக.

நாளை பள்ளி விடுமுறை.

விடை : நாளை பள்ளி விடுமுறையா?

10. வேர்ச்சொற்களைக் கொண்டு பிறவினைத் தொடர்கள் இரண்டு உருவாக்குக.

வேர்ச்சொற்கள் - கல், உண், செய், சிரி.

விடைகள் 

1. கற்சிலை செய்தான்.

2. உணவு உண்டவன் சிரித்தான்.

11. பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.

கடந்த

விடை :

 கட + த் (ந்) + த்+அ

கட = பகுதி

த் = சந்தி - ந் ஆனது விகாரம்

த் = இறந்தகால இடைநிலை

அ = பெயரெச்ச விகுதி

12. விடுபட்ட கட்டங்களில் பொருத்தமான பகுபத உறுப்புகளை இட்டு நிரப்புக.

(வரைந்தான்,கண்ட, விரித்த, கொடுப்பாய், பார்த்தனன்)


13. குறிப்புகளைப் பயன்படுத்திப் புதிரை விடுவிக்க.

இது ஓர் ஐந்தெழுத்துச் சொல்.

• முதல் இரண்டு எழுத்துகள் நேரத்தைக் குறிக்கும்.

• இறுதி மூன்று எழுத்துகள் ஓர் அணிகலன். • 

.முதல் எழுத்தையும இறுதி எழுத்தையும் இணைத்தால், குறிஞ்சியின் நிலம். அது என்ன?

விடை : மணிமேகலை

14. ஒவ்வொரு தொடர் வகைக்கும் ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

அ)கட்டளைத்தொடர் - பூக்களை பறிக்காதீர்!

ஆ)வினாத்தொடர்  - நாளை பள்ளிக்கு போக வேண்டுமா?

இ)உணர்ச்சித்தொடர் - எவ்வளவு உயரமான மரம்!

ஈ) செய்தித்தொடர் - நாளை என் நண்பன்  பள்ளிக்கு வருவான்.

உ)உடன்பாட்டுத்தொடர் - குமரன் மலையில் நனைந்தான்.

15. உரையாடலில் பயின்றுவரும் தொடர்வகைகளைக் கண்டறிந்து எழுதுக.

அம்மா: அமுதா. என்ன செய்து கொண்டிருக்கிறாய்? (1)

அமுதா: பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா (2)

அம்மா:அகிலன் எங்கே? விளையாடச் சென்று விட்டானா? (3)

அமுதா: இல்லை அம்மா! அகிலனையும் நான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். (4)

அம்மா:(அகிலனிடம்) வீட்டில் எண்ணெய் இல்லை. (5)

உடனே கடைக்கு விரைந்து சென்று எண்ணெய்  வாங்கி வா.வாங்கி வா (6)

விடைகள்: 

1. வினாத்தொடர்

2. செய்தி தொடர்

3. வினாத்தொடர்

4.உணர்ச்சித் தொடர்

5.எதிர்மறை வினைத் தொடர்

6.கட்டளைத் தொடர்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post