Tamil ilakkanam வினைமுற்று (vinaimutru)

 தமிழ் இலக்கணம் வினைமுற்று (vinaimutru)

சிறுவினா


Question 1.

  • வினைச்சொல் என்றால் என்ன?

Answer:
  • ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். ஒன்றன் தொழிலை உணர்த்தி காலத்தைக் காட்டி நிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இது முற்றுவினை, எச்சவினை என்று இரு வகைப்படும்.

Question 2.

  • வினைமுற்றுகள் எத்தனை வகைப்படும்?

Answer:
  • தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என வினைமுற்று இருவகைப்படும்.

Question 3.

  • தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?

Answer:
  • ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும். எ.கா: உழுதான்.

Question 4.

  • குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?

Answer:
  • பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும். எ.கா: ஆதிரையான்.

Question 5.

  • ஏவல் வினைமுற்று என்றால் என்ன?

Answer:
  • தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.

Question 6.

  • வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன?

Answer:

  • வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
  • இவ்வினைமுற்று இரு திணைகளையும், ஐந்து பால்களையும், மூன்று இடங்களையும் காட்டும்.
  • இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும். எ.கா: வாழ்க.
Question 7.

  • பால் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer:

  • பால் ஐந்து வகைப்படும்.
அவை, ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகும்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post