Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 4.1 கல்விஅழகே அழகு book back question and answer

Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 4.1 கல்விஅழகே அழகு book back question and answer

Tamilnadu state board 8th Tamil unit 3 book back question and answer ,important question and answer guide, notes term 1,2,3 pdf download

Tamilnadu Samacheer guide 8th Tamil book Solutions Chapter 4.1 கல்விஅழகே அழகு

கற்பவை கற்றபின்

 Question 1
சொற்றொடரில் அமைத்து எழுதுக .
கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  1. கல்வி கரையில கற்பவர் நாள் சில.
  2. கல்வி அழகே அழகு.
  3. கத்த (கற்ற) வித்த(வித்தை) காலத்துக்கு உதவும்.
  4. நூறு நாள் கத்தது (கற்றது), ஆறு நாள் விடப்போகும்.
  5. கற்க கசடற.
  6. இளமையில் கல்.
  7. நூல் பல கல்.
samacheer guide 8th Question 2.
கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம் பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
  • கண்ணுடையோர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
          புண்ணுடையார் கல்லா தவர். – திருக்குறள்

  • நிறைகுடம் நீர்தளும்பல் இல். – பழமொழி

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்கு
தன்தேச மல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. 
– மூதுரை
 Question 3.
பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.

Answer:

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
Samacheer guide 8th Tamil book Solutions Chapter 4.2 புத்தியை தீட்டு book back question and answer

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

samacheer guide.online 8th tamil Question 1.
கற்றவருக்கு அழகு தருவது ………………………….
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வைரம்
ஈ) கல்வி
Answer:
ஈ) கல்வி

samacheer guide.online 8th Question 2.
‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
ஈ) கலன் + னல்லால்
Answer:
இ) கலன் + அல்லால்

சொற்றொடரில் அமைத்து எழுதுக.

  1.  அழகு – கல்வியே உண்மையான அழகு.
  2. கற்றவர் – கல்வி கற்றவரே உலகில் உயர்ந்தவர்.
  3. அணிகலன் – மனிதனுக்கு உண்மையான அணிகலன் கல்வி ஆகும்.

குறுவினா


Question 1.
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
Answer:
  • கல்வி கற்றவருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை.

சிறுவினா


Question 1.
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • ஒளிவீசும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு மேலும் அழகுபடுத்த வேறு அணிகலன்கள் தேவையில்லை.
  • அதுபோலக் கல்வி கற்றவருக்கு அக்கல்வியே அழகு தரும்.
  • அதனால் அழகுபடுத்தும் அணிகலன்கள் கற்றவருக்குத் தேவையில்லை.

சிந்தனை வினா

Samacheer guide 8th Tamil book Solutions Chapter 4.2 புத்தியை தீட்டு book back question and answer
Question 1.
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:

  1. நம்முள் புதைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும்.
  2. பகுத்து அறியும் அறிவைத் தரும்.
  3. துன்பம் வரும் முன் தடுத்து நிறுத்தும் அறிவைத் தரும்.
  4. மெய்ப்பொருள் காணும் அறிவினைத் தரும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


Question 1.
குமரகுருபரரின் காலம் ……………………..
அ) கி.பி. 15
ஆ) கி.பி. 17
இ) கி.பி. 18
ஈ) கி.பி. 16
Answer:
ஆ) கி.பி. 17

Question 2.
நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்கள் ……………………
அ) 100
ஆ) 102
இ) 103
ஈ) 104
Answer:
ஆ) 102
Samacheer guide 8th Tamil book Solutions Chapter 4.2 புத்தியை தீட்டு book back question and answer

குறுவினா {Additional 2 mark}


Question 1.
நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் கூறுக.
Answer:
  • மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால், இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர்பெற்றது.

Question 2.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

  1. கந்தர் கலிவெண்பா
  2. கயிலைக் கலம்பகம்
  3. சகலகலாவல்லி மாலை
  4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  5. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

சிறுவினா {Additional 4 mark}

Question 1.
குமரகுருபரர் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
  1. பெயர் : குமரகுருபரர்
  2. பிறந்த ஊர் : ஸ்ரீவைகுண்டம்
  3. பெற்றோர் : சண்முக சிகாமணி – சிவகாமசுந்தரி
  4. காலம் : கி.பி. 17
  5. இயற்றிய நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை, கந்தர்கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லிமாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முதலியன.
Samacheer guide 8th Tamil book Solutions Chapter 4.2 புத்தியை தீட்டு book back question and answer

சொல்லும் பொருளும்

  1.  கலன் – அணிகலன்
  2. முற்ற – ஒளிர
  3. வேண்டாவாம் – தேவையில்லை

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post