ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி இயக்குநர்

 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடந்துவரும் நிலையில்,  மார்ச் மாதத்துடன் பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அளித்த பேட்டியில்,  ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இதனால் கல்வி நிறுவனங்கள் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்தன. இதையடுத்து கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, கொரோனா பரவல் ஆகியவற்றை கருத்தில்  கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டது .

இதனிடையே வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் வாக்குப்பதிவு பெரும்பாலும் பள்ளிகளிலேயே நடைபெறும். அதேபோல் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது.இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும் ஏப்.1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான வகுப்புகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன.உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கற்றல்- கற்பித்தல் பணிகளை வழக்கம் போல் மேற்கொண்டு வருகின்றனர்.9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை. இது குறித்து பரவும் தகவல்களை மாணவர்கள், பெற்றோர் நம்ப வேண்டாம்.இந்த வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடப்பகுதிகளை திறம்பட நடத்துவது அவசியம். அதனால் பள்ளிகளில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், என்றனர்.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post