தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!

 தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் சரிவர நடத்தாமல் பள்ளிக்கட்டணம் வசூலித்த 14 பள்ளிகள் மீது புகார் வந்துள்ளதாகவும், அதில் உண்மைத்தன்மையை கண்டறிந்து 10 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மீது நடவடிக்கை:

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த தகவலும் தமிழக அரசு வெளியிடாத நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த கல்வித்துறை அனுமதியளித்துள்ளது. ஆன்லைன் வசதி இல்லாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.



தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளி நிர்வாகம் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துவது, தேர்வுகள் நடத்துவது என சிறப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் கட்டணத்தை வசூலிக்க அரசு தடை விதித்திருந்தது.

தற்போது சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் சரிவர நடத்தாமல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வாங்குவதாக 14 பள்ளிகளின் மீது புகார் வந்துள்ளதாகவும், அதில் உண்மைத்தன்மையை கண்டறிந்து 10 பள்ளிகளின் மேல் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post