பொதுத்தேர்வு 2021: மாணவர்களின் பயம், அழுத்தத்தைப் போக்க ஆலோசகர்கள்- இலவசத் தொலைபேசி எண் அறிவிப்பு

 கோவிட்-19 காலகட்டத்தில் பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகாத நிலையில், மாணவர்களின் பயம், குழப்பம், அழுத்தத்தைப் போக்க ஆலோசகர்கள் உளவியல் ஆலோசனை அளிக்கும் வகையில் மத்தியக் கல்வி அமைச்சகம் இலவசத் தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பொது முடக்கத்தால் மார்ச் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் தொற்று அச்சம் காரணமாகப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.



இதற்கிடையே சிபிஎஸ்இ எனப்படும் மத்தியக் கல்வி வாரியம் மற்றும் மாநிலக் கல்வி வாரியங்கள் பொதுத் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் தங்களது சந்தேகங்கள், கருத்துகளை ட்விட்டரில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் மத்தியக் கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து டிசம்பர் 4ஆம் தேதி மாணவர்களுடனும், 22ஆம் தேதி ஆசிரியர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடினார்.


அதில், 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எழுத்துத் தேர்வாக காகித முறையிலேயே நடைபெறும் என்றும், பிப்ரவரி மாதம் வரை பொதுத்தேர்வுகள் கிடையாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

எனினும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பாடத்திட்டம், கேள்வி முறை, தேர்வுத் தேதி ஆகியவை குறித்துத் தங்களின் சந்தேகங்கள், கேள்விகளை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ''மாணவர்களே நீங்கள் கவலையிலோ, பயத்திலோ, நிராதரவான நிலையிலோ உள்ளீர்களா? நீங்கள் எதற்கும் துன்பப்படத் தேவையில்லை. உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்.

84484 40632 என்ற தேசிய இலவச தொலைபேசி எண்ணை அழைத்து எங்களின் ஆலோசகரிடம் பேசுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post