15 -ம் தேதி முதல் கல்வி முறையில் புதிய மாற்றம் ! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு !!

 வரும் ஜனவரி மாதம் 15 -ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடக்கபடும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனிடையே, கடந்த நவம்பர் 16- ம் தேதி முதல் 9 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனிடையே, எதிர்க்கட்சிகள், பெற்றோர்கள் எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.


இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.

செங்கோட்டையன், வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்படும் என தெரிவித்தார்

மேலும், ஜனவரி 20 -க்குள் 7,500 பள்ளிகளில் பயிற்சியாளர் உடன் கூடிய அறிவியல் ஆய்வுக்கூடங்களும் உரிய வசதிகளுடன் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post