ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை

 மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.



ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதனிடையே, ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று பரவலாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான சில கூடுதல் வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளைக் கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியும், ஒரு மண்டல அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்பு கட்டாயமில்லை:

மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் என்பது கட்டாயமில்லை என்றும், குடும்ப சூழலால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு வருகைப் பதிவேடு மற்றும் மதிப்பெண்கள் கணக்கிடக் கூடாது என்றும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு முழுமையாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களை மனப் போராட்டத்துக்கு உள்ளாக்கும் எந்த செயலிலும் ஆசிரியர்கள் ஈடுபடக் கூடாது என்றும் கல்வித்துறை ஆணையர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post