தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடரும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி மாவட்டங்களில் தற்போது அமலிலுள்ள முழு ஊரடங்கு பலனளித்துள்ளதால், அதேபோன்ற முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ம் தேதி வரை தொடரும். ஜூலை 6-ம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் 19-ம் தேதிக்கு முன்னர் அமலிலிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றபடி, தொழில்சார்ந்த நடவடிக்கைகளில் ஏற்கெனவே உள்ள தளர்வுகளே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post