WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil - மானப்பாடபாடல் - New syllabus - 2026

12th Tamil Memory poem - New syllabus - 2026

தன்னர் இலாத தமிழ் 

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்!

-தண்டி .


நெடுநல்வாடை 

மாமேயல் மறப்ப மந்தி கூரப்

பறவை படிவன வீழக் கறவை

கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்

குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் 

-நக்கீரர் 


திருக்குறள் 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது 


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

 தெய்வத்துள் வைக்கப் படும


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

 வானகமும் ஆற்ற லரிது 


நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்ல(து)

அன்றே மறப்பது நன்று.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை

 செய்ந்நன்றி கொன்ற மகற்கு 


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்

 தன்னையே கொல்லும் சினம் 


சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும் 


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

உண்மை அறிவே மிகும் 


திருக்குறள் 


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பது அறிவு 


எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய் 


வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற


சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்

 சொல்லிய வண்ணம் செயல் 


உருவுகண்(டு) எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்(கு)

அச்சாணி அன்னார் உடைத்து.


வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக

 கேள்போல் பகைவர் தொடர்பு 


துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்

 நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.


சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்

 வறுமை தருவதுஒன்று இல் 


கம்பராமாயணம் 

1.துன்பு உளதுஎனின் அன்றோ

சுகம் உளது? அது அன்றிப்

பின்பு உளது; இடை மன்னும்

பிரிவு உளது என உன்னேல்;

முன்பு உளெம் ஒரு நால்வேம்

முடிவு உளது என உன்னா

அன்பு உள, இனி, நாம் ஓர்

ஐவர்கள் உளர் ஆனோம் 


2.குகனொடும் ஐவர் ஆனேம்

முன்பு; பின்குன்று சூழ்வான்

 மகனொடும் அறுவர் ஆனேம்;

எம்முழை அன்பின் வந்த

அகன்அமர் காதல் ஐய!

நின்னொடும் எழுவர் ஆனேம்;

புகல்அருங் கானம் தந்து,

புதல்வரால் பொலிந்தான் நுந்தை. 


காவியம் 

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது.*

- பிரமிள


சிலப்பதிகாரம் 

குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்

தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்

பின்வழி நின்றது முழவே, முழவொடு

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை

தெய்வமணிமாலை 

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை

 பேசா திருக்கவேண்டும்

 பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்

பிடியா திருக்கவேண்டும் 

-இராமலிங்க அடிகள் 

இரட்சணிய யாத்திரிகம்

- எச்.ஏ. கிருட்டினனார

பாதகர் குழுமிச் பாதகர் குழுமிச் சொற்ற  பழிப்புரை  என்னும் என்னும் கொள்ளி

 ஏதமில் கருணணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற  இருதயத்து ஊன்ற ஊன்ற

 வேதனைனை உழந்து  சிந்தை வெந்து  புண்பட்டார் அல்லால்

நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும  நோக்கி .

Share:

0 Comments:

إرسال تعليق

📣 Join WhatsApp Channel