தமிழகத்தில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை - நீட்டிக்கப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை - நீட்டிக்கப்பட்டுள்ளது!

எண்ணும், எழுத்தும் பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு டிச.16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து டிச.24 (இன்று) முதல் ஜன.1-ம்தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 முதல் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு அரையாண்டு விடுப்பு முடிந்து மீண்டும் ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே 1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 3-ம் கட்ட பயிற்சி ஜன.2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜன.4-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜன.5-ம் தேதி திறக்கப்படும். இந்நாட்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். பயிற்சியில் இடம் பெறாதவர்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று இதர அலுவல் பணிகளை செய்ய வேண்டும். 

விடுமுறை நீட்டிப்பு 1-5 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு.. அதேநேரம், 6 முதல் 12-ம்வகுப்புகளுக்கான விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கெனவே அறிவித்தபடி ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post