தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



தமிழகத்தில் இதுவரை 35.38 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா 4-வது அலையில், ஜூலை மாதம் தொடக்கத்தில் தினசரி தொற்று அதிகபட்சமாக 3 ஆயிரம்வரை சென்றது. அதன் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. கடந்த 19-ம் தேதி தினசரி தொற்று பாதிப்பு 419 என்ற நிலைக்கு வந்தது. இந்நிலையில், தொற்று பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் தொற்றால் 529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே வாரத்தில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100 அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் பரிசோதனை

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் கரோனா பரிசோதனை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு என்ன வகையான காய்ச்சல் என கண்டறிய பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்மூலம் சிலருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகிறது. இதுவே தமிழகத்தில் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம். தமிழகத்தில் ப்ளூ, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுடன் கரோனா பரவலையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

புதிதாக 533 பேருக்கு தொற்று

இதற்கிடையே தமிழகத்தில் நேற்று ஆண்கள் 274, பெண்கள் 259 என மொத்தம் 533 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 116 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 479 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,349 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS1

 

POST ADS 2

Half yeraly Question Paper 2023, Important
12th Half Yearly Question Paper 2023
11th Half Yearly Question Paper 2023
10th Half Yearly Question Paper 2023
9th Half Yearly Question Paper 2023
8th Half Yearly Question Paper 2023
7th Half Yearly Question Paper 2023
6th Half Yearly Question Paper 2023