Half yeraly Question Paper 2023, Important
12th Half Yearly Question Paper 2023
11th Half Yearly Question Paper 2023
10th Half Yearly Question Paper 2023
9th Half Yearly Question Paper 2023
8th Half Yearly Question Paper 2023
7th Half Yearly Question Paper 2023
6th Half Yearly Question Paper 2023
  • 10th All subjects - Second Mid-Term Test Question paper 2023
  • 12th All subjects - 2nd Mid-Term Question paper 2023
  • 11th All subjects 2nd Mid-Term Test Question paper 2023
  • 9th 2nd Mid-Term Test Question paper 2023
  • 8th All subjects Second Mid-Term Question paper 2023
  • 💯 6th - 12th 2nd Mid Term Test Time table 2023 - Syllabus
  • 6th 2nd Mid-Term Test Question paper 2023
  • 6th Social Lesson 2 - மனிதர்களின் பரிணாம வளர்ச்சி - ( Manithargalain Parimana valarchi ) | Term 1

    6th Social Lesson 2 - மனிதர்களின் பரிணாம வளர்ச்சி - ( Manithargalain Parimana valarchi ) | Term 1

    பாடம்.2 மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

    I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

    1. பரிணாமத்தின் வழிமுறை __________________________

    a. நேரடியானது

    b. மறைமுகமானது

    c. படிப்படியான

    d. விரைவானது

    விடை : நேரடியானது

    2. தான்சானியா _________________ கண்டத்தில் உள்ளது.

    a. ஆசியா

    b. ஆப்பிரிக்கா

    c. அமெரிக்கா

    d. ஐரோப்பா

    விடை : ஆப்பிரிக்கா

    II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.

    1 கூற்று : உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.

    காரணம் : தட்பவெப்பநிலை மாற்றமே

    a. கூற்று சரி

    b. கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது

    c. கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.

    d. கூற்றும் காரணமும் தவறானவை.

    விடை : கூற்றும் காரணமும் சரி. ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.

    2. தவறான வாக்கிய இணையைக் கண்டுபிடி

    a. ஆஸ்ட்ரலோபிதிகஸ் – இரு கால்களால் நடப்பது

    b. ஹேமோ ஹபிலிஸ் – நிமிர்ந்து நின்ற மனிதன்

    c. ஹேமோ எரல்டஸ் – சிந்திக்கும் மனிதன்

    d. ஹேமோ சேப்பியன்ஸ் – முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.

    விடை : b, c மற்றும் d

    III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்ககால மனிதர்களின் காலடித்தடங்களை ___________________ உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார்கள்.

    விடை : மானிடயியலாளர்கள்

    2. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் ___________________  வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

    விடை : நாடோடி

    3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் ___________________ ஆகும்.

    விடை : வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல்

    4. ___________________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது

    விடை : (ஏர்) கலப்பை

    5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ___________________ என்னுமிடத்தில் காணப்படுகின்றன

    விடை : பொரிவரை – கரிக்கையூர்

    6. ___________________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பானை செய்வதை எளிதாக்கியது.

    விடை : சக்கரம்

    7. ___________________ தொல்லியல் துறையுடன் தொடர்புடையது.

    விடை : மானிடவியல்

    8. நகரங்களும் பெரு நகரங்களும் ___________________ ஆகியவற்றால் தோன்றின.

    விடை : வர்த்தகம் மற்றும் வணிகம்

    IV. சரியா ? தவறா ?

    1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும்.

    விடை : தவறு

    2. ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.

    விடை : சரி

    3. மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும்.

    விடை : சரி

    3. மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு.

    விடை : சரி

    V. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

    1. அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?

    • ரேடியோ கார்பன் முறை

    2. தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள்?

    • இலைகள்

    • தோல்

    • மரப்பட்டை

    3. தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?

    • குகைகள்

    4. நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?

    • காளை

    5. மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?

    • வேளாண்மையை அறிந்த பின்னர்

    VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

    1. பரிணாமம் என்றால் என்ன?

    இயற்கையில் ஏதேனும் ஒரு திடீர் மாற்றம் ஏற்படும் போது, உயிரினங்கள் அந்த மாற்றத்திற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு, உயிர் பிழைக்கின்றன. இவ்வாறு மனிதர்கள் காலத்திற்கு ஏற்றவாறு பல மில்லியன் ஆண்டுகளாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்டு வளர்ச்சி அடைவதே ‘பரிணாமம’ எனப்படுகிறது

    2. ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுது.

    ஹோமோ சேப்பியன்ஸ் என்ற மனித இனத்தவர் வேட்டையாடுவதிலும் உணவு சேகரிப்பதிலும் திறமை பெற்றிருந்தனர். மேலும் அவர்கள் மிகவும் கரடுமுரடான கற்கருவிகளை பயன்படுத்தினர்.

    3. மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள்?

    நமது மூதாதையர்கள் சிறு குழுக்களாக குகைகளில் வாழ்ந்தனர். ஆனால் அவர்கள் உணவு தேடுதலுக்காக இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர்.

    4. பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக்க கூறுவும்.

    பழங்காலத்தில் வேட்டையாடுதல்தான் பிரதான தொழிலாக இருத்தது. பெரிய விலங்குகளை கற்கள் மற்றும் கம்புகள் கொண்டு வீழ்த்துவது மிக கடினமாக இருந்தது. ஆதலால் நாளடைவில் மனிதர்கள் வேட்டைக் கருவிகளை நன்கு கூர்மையாக்கத் தொடங்கினர்.

    5. காேடாரிகள் ஏன் உருவாக்கப்பட்டனர்?

    காேடாரிகள் மரங்களை வெட்டுவதற்கும், பள்ளங்கள் தோண்டுவதற்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்கும் தோலை அகற்றுவதற்கும் உருவாக்கப்பட்டன.

    6. தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?

    தொல்லியல் என்பது வரலாற்றுக்கு முந்தய மனிதர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களைப் பற்றிய அகழ் பொருட்களின் ஆய்வே ஆகும்.

    7. மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது என்ன?

    மனிதர்களையும், அவர்களின் பரிணாம வளர்ச்சிசையும் பற்றிப் படிப்பது மானுடவியல் ஆகும். மானுடவியல் ஆய்வாளர்கள் மனித குலத்தின் வளர்ச்சியையும், அவர்களது நடத்தையும் ஆராய்கின்றனர்

    VII. கட்டக வினாக்கள்

    ___________________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பானை செய்வதை எளிதாக்கியது.

    • விடை : சக்கரம் 

    பண்டப்பரிமாற்ற முறை என்பது  _______________ ஆகும்

    • விடை : பொருட்களின் பரிமாற்றம்

     தொடக்க கால மனிதர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களின் இரண்டைக் கூறு

    • விடை : கற்கருவிகள், மரக்கிளைகள், எலும்புகள்

    ஆயுதம் செய்வதற்கு ஏற்ற கல் எது?

    • விடை : சிக்கி-முக்கி கல்

     நகரங்களும், பெரு நகரங்களும் _______________ மற்றும் _______________ ஆகியவற்றால் தோன்றின

    விடை :  வர்த்தகம் மற்றும் வணிகம்

     மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எது

    விடை : சக்கரம்

    பாறை ஓவியங்களில் உள்ள உருவகங்களை அடையாளம் காணவும்

    விடை : 

    தொடக்க கால மனிதர்களின் முதன்மையான தொழில் எது?

    விடை : வேட்டையாடுதல் 

    வேட்டையாடுதல் குகை ஓவியங்கள் மூலம் நாம் என்ன அறிந்து  கொள்கிறோம்?

    விடை : அன்றாட நிகழ்வுகள்.

    தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?

    விடை :  குகைகள் 

    _______________ தொல்லியல் துறையுடன் தொடர்புடையது

    விடை : அகழ்வாராய்ச்சி 

    தொடக்க கால மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் இரண்டைக் குறிப்பிடு.

    விடை : நாய், காளை.

    Post a Comment

    கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

    குறிப்பு:

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
    -அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

    Previous Post Next Post

    POST ADS1

     

    POST ADS 2

    Half yeraly Question Paper 2023, Important
    12th Half Yearly Question Paper 2023
    11th Half Yearly Question Paper 2023
    10th Half Yearly Question Paper 2023
    9th Half Yearly Question Paper 2023
    8th Half Yearly Question Paper 2023
    7th Half Yearly Question Paper 2023
    6th Half Yearly Question Paper 2023