12th Tamil First Revision Important Questions

12th Tamil Revision Important 2 Mark Questions


Important 2 marks ( செய்யுள்,உரைநடை) 

1.அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?

  • தண்டியலங்காரம்
  • மாறனலங்காரம்
  • குவலயானந்தம்

2. அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?

  • தொல்காப்பியம், 
  • வீரசோழியம், 
  • இலக்கண விளக்கம், 
  • தொன்னூல் விளக்கம், 
  • முத்து வீரியம் .

3.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தினைக் குறிப்பிடுக

  • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.

"ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை

வெண்பா நடகத்தே கலி"

  • என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

4.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

  •  செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களை வியந்நு பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி

5.நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக.

  • மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.
  • திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
  • சில மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

6.புக்கில், தன்மனை சிறு குறிப்பு வரைக.

 புக்கில் :

  • ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.

தன்மனை :

  •  பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது

7.நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?

  • நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.

“என் பொய்யான உலகப்பற்று அழிந்தது;

 என் பிறவி ஒழிந்தது” 

  • என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள்.

8.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

  • ஆனந்தம், 
  • மனச்சோர்வு, 
  • அற்பத்தனம், 
  • விழிப்புணர்வு 

. இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்.

மொழித்திறன் பயிற்சி Important 2 Marks ( 7 )

2 marks:

1. விடியல் ,வனப்பு இரு சொற்களையும் இணைத்து ஒரே தொடர் அமைக்க :-

விடை :

  • காலை விடியலின் வனப்பு கண்களைக் கவரும். 
2.திருவளர்செல்வன்,திருவளர்ச்செல்வன் சரியான தொடர் எது ? அதற்க்கான காரணத்தை கூறுக.
விடை : 

  • சரியான தொடர் : திருவளர்செல்வன்
  • காரணம் : வினைத்தொகையில் வல்லினம் மிகாது

பக்க எண் 20

உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

1.தாமரை இலை நீர் போல – பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்.

Answer:

இவ்வுலக ஆசைகளின் மீது தாமரை இலை நீர் போல பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும்.

2.கிணற்றுத் தவளை போல – வெளி உலகம் தெரியாத நிலை.

Answer:

இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர்.

 3.எலியும் பூனையும் போல – எதிரிகளாக.

Answer:

ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

4.அச்சாணி இல்லாத தேர் போல – சரியான வழிகாட்டி.

Answer:

நாட்டை வழி நடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர் போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.

5.உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படையாக, தெளிவாக.

Answer:

தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது.

  • பக்க எண் 21

குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.

1. தமிழறிஞர் : முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம்.

2. தாய்மொழி : ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.

3. சிறுகதை ஆசிரியர் : முதல் பாதி நவீனம்

4. முன்னெழுத்து அரசன் : பின்னெழுத்து தமிழ் மாதம்

Answer:

1. மறைமலை அடிகள்

2. தமிழ் ஒளி

3. புதுமைப்பித்தன்

4. கோதை

  • பக்க எண் 44

  • பக்க எண் 46
  • பக்க எண் 70
  • பக்க எண் 72

புணர்ச்சி:

வானமெல்லாம்

விடை : 

  • வானம் + எல்லாம்

விதி : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே

அருங்கானம்,

விடை : 

  • அருமை + கானம்

விதி : ஈறுபோதல்

இனநிரை,

விடை : 

  • இனம் + நிரை

விதி : மவ்வீறு ஒற்றழிந்நு உயிரீறு ஒப்பவும்

செல்லிடத்து

விடை : 

  • செல் + இடத்து

விதி 1 : தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்

செல் (ல் + இ) டத்து

விதி 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுதல் இயல்பே

பகுபதம்

வியந்து 

விடை : 

விய + த் (ந்) + த் + உ

  • விய - பகுதி
  • த். - சந்தி ( ந் ஆனது விகாரம் )
  • த் - இறந்தகால இடைநிலை
  • உ - வினையெச்ச விகுதி

விம்முகின்ற 

விடை - விம்மு + கின்று + அ

  • விம்மு - பகுதி 
  • கின்று - நிகழ்கால இடைநிலை 
  • அ - பெயரெச்ச விகுதி

  • பக்க எண் : 97
இலக்கணக்குறிப்பு தருக

திருக்குறள் வினாக்கள் படித்துக்கொள்ளவும் 


1 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post