6th Tamil Assignment 2 Answer key PDF Download

6th Tamil Assignment 2 Answer key PDF Download

  •  ஆறாம்வகுப்பு - தமிழ்

  • பாடத்தலைப்பு: திருக்குறள் பாகம்:2

ஒப்படைப்பு – விடைகள்

                          வகுப்பு  :  6               பாடம்: தமிழ்    அலகு 2

                         பகுதி – அ

1.ஒரு மதிப்பெண்வினா

1. கதிரவனின் மற்றொரு பெயர்?

அ) புதன்

ஆ) ஞாயிறு 

இ) சந்திரன்

ஈ)செவ்வாய்

விடை :  ஆ ) ஞாயிறு

2. வெண்குடை என்ற சொல்லை பிரித்தெழுதுக……..

அ) வெண்+குடை

ஆ) வெண்மை+குடை

இ) வெம்- குடை

ஈ) வெம்மை குடை

விடை : ஆ ) வெண்மை + குடை 

3. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் …….

அ) ஏரி

ஆ) கேணி

இ) குளம்

ஈ) ஆறு

விடை :  ஆ ) கேணி 

4. நில + ஒளி என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்………

அ) நிலா ஒளி       

ஆ) நில ஒளி

இ) நிலவொளி 

ஈ) நிலவு ஒளி

விடை : இ ) நிலவொளி 

5. வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக

அ) வேதி+யுரங்கள்

ஆ) வேதி +  உரங்கள்

இ)வேதி + உரங்கள்

ஈ) வேதியு+ரங்கள்

விடை  : ஆ ) வேதி + உரங்கள்

6. நன் மாடங்கள் என்னும் சொல்லை பிரித்தெழுதுக

அ) நன் + மாடங்கள்

ஆ) நற்  + மாடங்கள்

இ) நன்மை +  மாடங்கள்

ஈ) நல் + மாடங்கள்

விடை : இ ) நன்மை + மாடங்கள் 

7. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி………..

அ) துருவப் பகுதி

ஆ) இமயமலை

இ) இந்தியா

ஈ) தமிழ்நாடு

விடை : அ ) துருவப் பகுதி 

8. வழி தடம் என்பதனைச் சேர்த்து எழுதுக

அ) வழிதடம்

ஆ) வழித்தடம்

இ) வழிதிடம்

ஈ) வழித்திடம்

விடை : ஆ ) வழித்தடம்

9. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது………..

அ) ஊக்கமின்மை

ஆ) அறிவுடைய மக்கள்

இ)வன்சொல்

ஈ) சிறிய செயல்

விடை : ஆ ) அறிவுடைய மக்கள்

10. ஒருவருக்குச் சிறந்த அணி………..

அ) மாலை

ஆ) காதணி

இ) இன்சொல்

ஈ)வன் சொல்

விடை : இ ) இன்சொல்

பகுதி-ஆ

IL. சிறுவினா

1. இயற்கை போற்றத்தக்கது ஏன்?

  • வெண்ணிலவு தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது.
  • கதிரவன் பொன் போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது. 
  • மழை வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது.
  •   எனவே , இயற்கைப் போற்றத்தக்கது.

2. காணி நிலம் பாடலின் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக?

  • காணி – காணி  = கா
  • பத்துப் – பக்கத்திலே = ப
  • முத்துச் சுடர் – முன்பு   = மு

3. பறவைகள் எக்காரணங்களுக்கு இடம் பெயர்கின்றன? 

  •   உணவு  , இருப்பிடம் , தட்பவெப்பநிலை மாற்றம் , இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன.

4. சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது?

  •   சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் .
  •   கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்ப மாட்டார்.
  •    மனோலின் எனும் சிறுவன் அவருடன் மீன் பிடிக்க வந்தான். 
  •   சாண்டியாகோ விடாமுயற்சியும் , தன்னம்பிக்கை உடையவராகவும் திகழ்கிறார்.

5. எழுத்துக்களுக்குத் தொடக்கமாக அமைவது?

  • முதலெழுத்துகள்

  பகுதி – இ

III. பெருவினா

1 பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றி சிந்தித்து எழுதுக?

  •  ஆல் , அரசு போன்ற மரங்களையும்  அவரை , புடலை பொன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும்.
  •   நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் தாவரங்களையும் வளர்க்க வேண்டும்.
  •   தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள் , பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பகுதி-ஈ

IV.செயல்பாடு

1 சாண்டியாகோவைப் போன்று உனக்கோ அல்லது உன்னைச் சார்ந்தவர்களுக்கோசவாலாக இருந்த ஒருநிகழ்வை அரைப்பக்க அளவில் எழுதுக.

    

விடைத்தயாரிப்பு 

திரு. பா சிவசாமி MA BEd, 

தமிழாசிரியர் ,திண்டுக்கல் மாவட்டம்



Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post