தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..

tamilnadu-ration-card-holders-relief-fund

தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று பதவியேற்றவுடன் முதலாவதாக 5 திட்டங்களில் கையெழுத்திட்டு உள்ளார். அதில் கொரோனா கால நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


கொரோனா நிவாரணம்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று (மே 6) முதல் பிற்பகல் 12 மணிக்கு மேல் கடைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இன்று தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்று உள்ள முக ஸ்டாலின் அவர்களின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட திட்டத்தில் முதலாவதாக எதை அமல்படுத்துவார் என்கிற கேள்வி எழுந்தது.

அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதலாவதாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார். அதில் முக்கியமானதாக தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3 அன்று தொடங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மே மாதமே ரூ.2000 வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,153.39 கோடி செலவில் நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது. இம்மாதமே முதல் தவணை ரூ.2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post