12th Tamil Guide Chapter 2-2 பிறகொரு நாள் கோடை - Book solutions

 Samacheer book 12th Tamil Guide Chapter 2.2 பிறகொரு நாள் கோடை - Book solutions

Tamilnadu state board Syllabus based 12th Tamil Full Guide solutions book back answers guide PDF Download. 12th Tamil important Questions Reduced Syllabus 2020-2021, 12th tamil New reduced Syllabus Question bank 2020-2021 ,12th Tamil notes ,important Questions collection, 12th Tamil unit 1 one mark Questions PDF Download

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.2 பிறகொரு நாள் கோடை



    கற்பவை கற்றபின்

    Question 1.

    ‘மழை’ தொடர்பான கவிதைகளைத் தொகுத்து இதழ் ஒன்று உருவாக்குக.

    Answer:


    பாடநூல் வினாக்கள்

    பலவுள் தெரிக

    Question 1.

    நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது

    அ) சூரிய ஒளிக்கதிர்

    ஆ) மழை மேகங்கள்

    இ) மழைத்துளிகள்

    ஈ) நீர்நிலைகள்

    Answer:

    இ) மழைத்துளிகள்


    குறுவினா

    Question 1.

    ‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.

    Answer:

    • மழை மேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.
    • திடீரென சூரியன் தோன்ற மழைமேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
    • சில மழைத்துளிகளின்மீது படுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.

    சிறுவினா

    Question 1.

    ‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து

    உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்” – இக்கவிதையின் அடி,

    ‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.

    Answer:

    ‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்’

    • ஏற்றம் இறைப்பவர்கள் அலுப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று.
    • விடியும் போது மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனிநீர் வைரம் வைத்தது போல இருக்கும். சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த ஒருதுளி நீரையும் விட்டு வைக்காமல் தானே எடுத்துக் கொள்வான்.
    • அதிகாலையில் மூங்கில் இலையில் இருக்கும் பனிநீரை மீண்டும் சூரியன் வாங்கிக் கொள்கிறான். இஃது ஓர் நீர்வட்டம்.

    “நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குறித்து

    உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்”

    • நீர் நிலைகளை வந்தடையும் மழை நீரைச் சூரியன் தன் ஒளிக்கதிர் என்ற உதடுகளால் உறிஞ்சுகிறான்.
    • வானில் இருந்து விழும் மழை நீரை மீண்டும் வானுக்கே எடுத்துக் கொள்கின்றான் சூரியன். இது ஒரு நீர் வட்டம்.

    நயம் :

    • நாட்டுப்புறப்பாடலில் ஒரு துளி பனி நீரைக்கூட சூரியன் விடுவதில்லை தன் ஒளிக்கதிர்களால் எடுத்துக் கொள்கிறான் எனக் குறிப்பிடப்படுகிறது.
    • பிறகொரு நாள் கோடை’ கவிதையில் கவிஞர் மழையாக வந்து நீர்நிலைகளை நிரப்பும் நீரைத் தன் கதிர்களால் இதழ் குவித்து உறிஞ்சுகிறது சூரியன் என்கிறார்.
    • பனித்துளியை வாங்கிக் கொண்டான் கதிரவன் – நாட்டுப்புறப்பாடல்.
    • நீர்நிலை மழைத்துளிகளை உறிஞ்சுக் கொண்டான் கதிரவன் – பிறகு ஒரு நாள் கோடை.

    கூடுதல் வினாக்கள்

    பலவுள் தெரிக

    Question 1.

    பகலும் இரவும் சந்திப்பது

    அ) இரவு

    ஆ) அந்தி

    இ) வைகறை

    ஈ) யாமம்

    Answer:

    ஆ) அந்தி

    Question 2.

    நீர்நிலையில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்துக்கொண்டது?

    அ) கரங்களால் பருகி

    ஆ) நீரில் மூழ்கி

    இ) உதடுகள் குவித்து

    ஈ) குவளையில் பிடித்து

    Answer:

    இ) உதடுகள் குவித்து


    Question 3.

    அய்யப்ப மாதவன் இயங்கி வரும் துறைகள்

    அ) இதழியல் துறை, திரைத்துறை

    ஆ) கல்வித்துறை, இதழியல் துறை

    இ) இசைத்துறை, இதழியல் துறை

    ஈ) ஒளித்துறை, திரைத்துறை

    Answer:

    அ) இதழியல் துறை, திரைத்துறை


    Question 4.

    நம் பாடப்பகுதி எடுக்கப்பட்டுள்ள தொகுப்பு

    அ) அய்யப்ப மாதவன் கவிதைகள்

    ஆ) நீர்வெளி

    இ) பிறகொரு நாள் கோடை

    ஈ) மழைக்குப் பிறகும் மழை

    Answer:

    அ) அய்யப்ப மாதவன் கவிதைகள்

    Question 5.

    கூற்று சரியா? தவறா?

    கூற்று 1 : நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது.

    கூற்று 2 : செங்குத்தாய் இறங்கிய மழையைக் கரத்தினுள் வழிய விடுகிறேன்.

    அ) கூற்று 1 சரி 2 தவறு

    ஆ) கூற்று இரண்டும் தவறு

    இ) கூற்று 1 தவறு 2 சரி

    ஈ) கூற்று இரண்டும் தவறு

    Answer:

    அ) கூற்று 1 சரி 2 தவறு


    Question 6.

    கூற்று சரியா? தவறா?

    கூற்று 1 : மீதமான சொட்டுகளை ஈரமான மரங்கள் தலையசைத்து உதறுகிறது.

    கூற்று 2 : வெயில் கண்ட பறவைகள் வெயில் தாங்காமல் வீழ்கின்றன.

    அ) கூற்று இரண்டும் தவறு

    ஆ) கூற்று இரண்டும் சரி

    இ) கூற்று 1 சரி 2 தவறு

    ஈ) கூற்று 1 தவறு 2 சரி

    Answer:

    இ) கூற்று 1 சரி 2 தவறு

    Question 7.

    கூற்று சரியா? தவறா?

    கூற்று 1 : கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புகளுக்குள் மத்தளம் அடிக்கின்றது.

    கூற்று 2 : போன மழை மீண்டும் திரும்பாது என அலைகிறேன்.

    அ) கூற்று இரண்டும் சரி

    ஆ) கூற்று 1 தவறு 2 சரி

    இ) கூற்று 1 சரி 2 தவறு

    ஈ) கூற்று இரண்டும் தவறு

    Answer:

    ஈ) கூற்று இரண்டும் தவறு


    Question 8.

    சரியானதைத் தேர்க.

    அ) நகரம் – அமைதியாயிருந்தது

    ஆ) நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன

    இ) மரங்கள் – வேர்விட்டன

    ஈ) பறவைகள் சங்கீதம் இசைக்கவில்லை

    Answer:

    ஆ) நீர்ச்சுவடுகள் – சுவரெங்கும் இருந்தன

    Question 9.

    பொருந்தாததைத் தேர்க.

    அ) மரங்கள் – தலையசைத்து உதறுகிறது

    ஆ) பறவைகள் – சங்கீதம் இசைத்தன

    இ) சுவர் – நீர்ச்சுவடுகள் அழித்தன

    ஈ) நரம்புகள் – மத்தளம் இசைத்தன

    Answer:

    ஈ) நரம்புகள் – மத்தளம் இசைத்தன


    Question 10.

    பொருத்துக.

    அ) இன்று – 1. அய்யப்ப மாதவன்

    ஆ) நீர்வெளி – 2. கவிதைக்குறும்படம்

    இ) சிவகங்கை – 3. கவிதை நூல்

    ஈ) நரம்புகள் – 4. வீணை

    அ) 2, 1, 4, 3

    ஆ) 2, 3, 4, 1

    இ) 2, 3, 1, 4

    ஈ) 3, 1, 2, 4

    Answer:

    இ) 2, 3, 1, 4

    Question 11.

    பொருத்துக.

    அ) நகரம் – 1. நரம்புக்குள் மீட்டுதல்

    ஆ) பறவைகள் – 2. உதடுகள்

    இ) வீணை – 3. வைரம்

    ஈ) ஒளிக்கதிர்கள் – 4. சங்கீதம்

    அ) 3, 1, 4, 2

    ஆ) 3, 2, 1, 4

    இ) 3, 2, 4, 1

    ஈ) 3, 4, 1, 2

    Answer:

    ஈ) 3, 4, 1, 2


    Question 12.

    ‘பிறகொருநாள் கோடை’ என்னும் கவிதை எடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு

    அ) மழைக்குப் பிறகும் மழை

    ஆ) நானென்பது வேறொருவன்

    இ) நீர்வெளி

    ஈ) அய்யப்பமாதவன் கவிதைகள்

    Answer:

    ஈ) அய்யப்பமாதவன் கவிதைகள்

    Question 13.

    அய்யப்ப மாதவனின் ‘இன்று’ என்பது

    அ) கவிதைத் தொகுப்பு

    ஆ) கவிதைக் குறும்படம்

    இ) ஆவணப்படம்

    ஈ) புதினம்

    Answer:

    ஆ) கவிதைக் குறும்படம்


    Question 14.

    அய்யப்பன் மாதவனின் மாவட்டம் ………….. ஊர் ………………..

    அ) தஞ்சாவூர், பருத்திக்கோட்டை

    ஆ) சிவகங்கை, நாட்டரசன் கோட்டை

    இ) மதுரை, அவணியாபுரம்

    ஈ) திருநெல்வேலி, வள்ளியூர்

    Answer:

    ஆ) சிவகங்கை, நாட்டரசன் கோட்டை


    Question 15.

    அய்யப்ப மாதவனுக்குத் தொடர்பில்லாத கவிதைத் தொகுப்பினைக் கண்டறிக.

    அ) மழைக்குப் பிறகும் மழை

    ஆ) நானென்பது வேறெருவன்

    இ) நீர்வெளி

    ஈ) நீர்விழிராகம்

    Answer:

    ஈ) நீர்விழிராகம்


    Question 16.

    போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அழைகிறேன் என்று பாடியவர்

    அ) அய்யப்ப மாதவன்

    ஆ) இரா. மீனாட்சி

    இ) வேணுகோபாலன்

    ஈ) ஆத்மாநாம்

    Answer:

    அ) அய்யப்ப மாதவன்

    குறுவினா

    Question 1.

    அய்யப்ப மாதவன் வெளியிட்டுள்ள கவிதை நூல்கள் யாவை?

    Answer:

    • மழைக்குப் பிறகும் மழை
    • நானென்பது வேறொருவன்
    • நீர்வெளி

    Question 2.

    வெளில் கண்ட பறவைகளின் செயல் யாது?

    Answer:

    • வெளிலைக் கண்ட பறவைகள் உற்சாகம் பீறிட சங்கீதம் இசைக்கின்றன.

    Question 3.

    சூரியனைக் கண்ட மரங்களின் செயல் யாது?

    Answer:

    • சூரியனைக் கண்ட ஈரமான மரங்கள் மீதமுள்ள சொட்டுக்களை தலையசைத்து உதறுகின்றன.


    சிறுவினா

    Question 1.

    மழையிலிருந்து விடுபடும் ஊரின் தன்மையைக் கவிஞர் அய்யப்ப மாதவன் எக்குறியீடுகளின் மூலம் வெளிப்படுத்துகின்றார்?

    Answer:

    • மழை நின்றதால் சுவர்கள் மீது வழிந்தோடிய மழைநீர் நின்றது.
    • கொஞ்சம் இருந்த நீர் சுவடுகளையும் சுவர் வேகமாகத் தன் வசம்படுத்திக் கொண்டது.
    • ஈரமான மரங்கள் தங்கள் கிளைகளை அசைத்து தன் மீது படர்ந்திருந்த மீதமான நீர்த்துளிகளையும் உதறியது.
    • வெயிலைக் கண்டதால், மழை நீருக்கு அஞ்சியிருந்த பறவை உற்சாகம் வெளிப்பட தன் குரலால் சங்கீதம் இசைத்தது.
    • இவையே அவ்வூர் மழையிலிருந்து விடுபடுவதைக் குறிப்பிடும் குறியீடுகளாக அய்யப்ப மாதவன் குறிப்பிடுகிறார்.

    Question 2.

    கவிஞர் அய்யப்ப மாதவன் பற்றிக் குறிப்பு எழுதுக.

    Answer:

    • பெயர் : அய்யப்ப மாதவன்
    • ஊர் : சிவகங்கை – நாட்டரசன் கோட்டை
    • பணி : திரைத்துறை, இதழியல் துறை
    • நூல்கள் : மழைக்கு பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர் வெளி. இன்று என்ற கவிதைக் குறும்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

    Post a Comment

    கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

    குறிப்பு:

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
    -அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

    Previous Post Next Post